Monday, July 12, 2021

சங்கின்னாலே மோசம்தான் சார்

 



சங்கிகள் பற்றிய பதிவொன்றில் யாரோ ஒரு அனாமதேயம் “ சங்கிகள் எல்லோருமே முட்டாள்கள்தானா? நல்லவர்கள் கிடையாதா?” என்று என்றொரு கேள்வி எழுப்பி இருந்தார்.

சங்கிகளில்  முட்டாள்கள் மட்டுமல்ல, அயோக்கியர்களும் உள்ளார்கள் என்று ஒரு வரி பதில் எழுதினாலும் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவே இந்த பதிவு. சங்கி என்பவர் யார்?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்  என்று மட்டும் இன்றைய சங்கிகளை சுருக்கி விட முடியாது. மோடி ஆதரவாளர் என்று மட்டும் சொல்லி விட முடியாது. இந்து மதப் பற்றாளர்களையெல்லாம் சங்கி என்று சொல்லி விடவும் முடியாது.

அப்படி என்றால் யாரெல்லாம் சங்கி என்ற வரையறைக்குள் வருவார்கள்?

பிற மதங்களால் தன் மதம் பாதிக்கப்பட்டு விடும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே நம்பி தன் மதத்தை பலவீனமான நோயாளி போல கருதி மாற்று மதத்தினர் அனைவரையும் தன் மதத்திற்கு எதிரானவர்கள் என்று காமாலைக் கண்ணோடு, இல்லையில்லை காவிக் கண்ணோடு பார்ப்பவர்கள்.

நானே சொன்னாலும் கூட அதை அப்படியே நம்பாமல் உன் அறிவுக்கு உட்படுத்து என்று தந்தை பெரியார் சொன்னதற்கு நேர் மாறாக தான் நம்புகிற ஒருவர் என்ன சொன்னாலும் அது கடைந்தெடுத்த அபத்தம், அயோக்கியத்தனம் என்பதையெல்லாம் உணராமல் ஆட்டு மந்தைக் கூட்டமாக அப்படியே நம்புகிற மூடர் கூட்ட பிரதிநிதி.

தந்தை பெரியார் என்று சொல்லக்கூடாது என்று வைராக்கியமாக ஈ.வெ.ரா என்று நாகரீகமாகவும் சொறியான் என்று அவர்கள் உயர்ந்த பாரம்பரியப் படியும் அழைப்பவர்கள்.

கம்யூனிஸ்டுகளை கம்மிகள் என்று மட்டுமே சொல்பவர்கள்.  தேச பக்தி என்றால் என்னவென்று புரியாமல் தாங்கள்தான் தேசபக்தர்கள் என்று பீற்றிக் கொண்டு மற்றவர்களுக்கு தேச விரோதி முத்திரை குத்துபவர்கள்.

“சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காதரடி” என்று பாரதி பாடியதற்கு பொருத்தமானவர்கள்.  இவர்களுக்கு பிடிக்காதவர்கள் யார் இறந்தாலும் கொண்டாடுவார்கள். கலைஞர், யு.ஆர்.அனந்த மூர்த்தி தொடங்கி சமீபத்தில் ஸ்டான் சுவாமி வரை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அயோக்கியர்கள்.

அதானி, அம்பானிக்கு வாரி வழங்குவதை வரவேற்பார்கள். அவர்கள் பணம் கொள்ளை போவது கூட தெரியாத மடையர்கள்.

இட ஓதுக்கீட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரானவர்கள். பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிரானவர்கள்.

இந்தி தெரியாது, சமஸ்கிருதம் புரியாது. ஆனால் தமிழை, தமிழர்களை எப்போதும் இழிவு படுத்திக் கொண்டே இருப்பவர்கள்.

மோடியை நல்லவர், வல்லவர், அறிவாளி, நிர்வாகத் திறனுள்ளவர் என்றெல்லாம் நிஜமாகவே நம்புபவர்கள்.  மோடியின் மூலம் புதிய இந்தியா பிறந்து ஊழல் ஒழிந்து விட்டதான கற்பனை உலகில் மிதப்பவர்கள்.

கிஷோர்.கே.சுவாமி, மாரிதாஸ், ஸ்டான்லி ராஜன் ஆகியோர் சத்யசந்தர்கள் என்றும் அவர்கள் என்ன சொன்னாலும் அதை வேதவாக்காக எடுத்துக் கொள்பவர்கள்.

ஆட்டுக்கார அண்ணாமலை மக்களுக்கு சேவை செய்யவே ஐ.பி.எஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டார் என்ற கதையை பரப்பிக் கொண்டிருப்பவர்.

ஜாதிய  மேலாதிக்கத்தை நிலை நிறுத்த பார்ப்பவர்கள்.

மனுதர்மம்தான் பெண்களை இழிவு படுத்தியது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்து அந்த உண்மையைச் சொன்ன திருமாவை திட்டுபவர்கள்.

ஒன்றியம்  என்ற வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல் தமிழ் நாட்டை ஊராட்சி என்று சொல்லி காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிற முட்டாள்கள். அதே நேரம் கொங்கு நாடு என்றால் கூத்தாடுபவர்கள்.

மொத்தத்தில் தாங்கள் மூடர்கள், அயோக்கியர்கள் என்பதையே உணராத மூடர்களும் அயோக்கியர்களும் நிரம்பிய கூட்டத்தை சேர்ந்தவர்களே சங்கிகள்.

சங்கிகள் எப்பேற்பட்ட அயோக்கியர்கள், மூடர்கள் என்று அறிந்து கொள்ள சுலபமான வழி ஒன்று உள்ளது.

மத்யமர் முகநூல் குழுவில் இணைந்து விடுங்கள். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த இரண்டு கேட்டகரியைச் சேர்ந்தவர்கள்தான். 

ராஜாராணி படத்தில் சந்தானம் சொல்வார்

“ஃப்ரெண்டில ஏதுமா நல்ல ஃப்ரெண்டு, கெட்ட ஃப்ரெண்டு? ஃப்ரெண்டுனாலே நல்லவன் மட்டும்தாம்மா”

அது போலத்தான்.

சங்கிகளில் நல்ல சங்கி, கெட்ட சங்கி என்றெல்லாம் பிரிக்க முடியாது.

சங்கின்னாலே மொத்தமா மோசம்தான்.

பிகு: சங்கியில் ஆண் பெண் பேதம் கிடையாது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.

சில உதாரணங்களை பிறகு சொல்கிறேன்.

 

4 comments:

  1. மனுஷன், மனுஷியைத் தவிர இவ்வுலகில் ஜாதியே இல்லை என்று நினைப்பவன் நான். அன்புள்ள நண்பரே சங்கி எனும் ஜாதியை உருவாக்காதீர். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. மனிதத்தை அழிக்க அவர்கள் ஏற்கனவே உருவாகி விட்டார்கள்ள்.
      இந்தியாவை பாதுகாக்க சங்கிகளை ஒழிக்க வேண்டும்

      Delete
  2. மத்யமர் முகநூல் குழுவில் இணைய சொல்கிறீர்கள்.இணைந்தால் என்னைப் போன்றவர்களுக்கு தலைவலி தான் வரும் தோழர்.அவர்களுடைய‌ முட்டாள்தனமான பதிவுகளுக்கு நீங்கள் மறுபதிவு போட்டால் எங்கிருந்துதான் வருகிறார்கள் என்று தேரியாது.நம்மை உண்டு இல்லை என்று பன்னிவிடுவார்கள்.வேண்டாம் விஷப்பரீட்சை.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் பதிவுகளுக்கு ம்றுப்பு போட்டு நம் நேரத்தை வீணாக்கக் கூடாது. அவர்களின் அபத்தமான பதிவுகளை படித்து சிரித்து வெளியில் அம்பலப்படுத்த வேண்டும்

      Delete