Thursday, July 29, 2021

துக்ளக் துர்வாசரின் துர்நாற்றக் கட்டுரை

 


கீழடி போன்ற தொல்பொருள் ஆய்வுகள் தண்டச் செலவு என்றும் அதனால் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்று துர்வாசர் என்ற பெயரில் யாரோ ஒரு கிறுக்கர் துக்ளக்கில் கட்டுரை எழுதியுள்ளார்.



சமீபத்தில் கி.ரா இறந்து போன போது அற்பத்தனமாக எழுதிய வண்ண நிலவன் முன்பு துர்வாசர் என்ற பெயரில் துக்ளக்கில் மக்கள் விரோத கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார்.

இந்த துர்வாசர் அவரா இல்லை வேறு புதியவரா என்று தெரியவில்லை. யாராக


இருப்பினும் அவர்களின் வயிற்றெரிச்சல் நாற்றம் நன்றாகவே தெரிகிறது.

 கீழடியோ இல்லை மற்ற ஆய்வுகளோ ஏன் இவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது?

 ஆரிய நாகரீகத்திற்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்த நாகரீகம் இவை என்பது மட்டுமல்ல, இதுவரை அகழ்வாய்ந்து எடுக்கப்பட்ட அரும் பொருட்கள் எதிலும் இவர்கள் வித்ந்தோதும் மதச் சின்னங்கள் எதுவும் கிடையாது.

 மதமற்றவனாகத்தான் தமிழன் வாழ்ந்துள்ளான் என்பதை இவர்களால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்! அதனால்தான் துர்நாற்றமடிக்கும் கட்டுரையை துர்வாசரிடமிருந்து வந்துள்ளது.

 புராணக் கதைகள் படி துர்வாசர் ஒரு கோபக்கார, ஆணவமிக்க, அகந்தை பிடித்த, மூளையை பயன்படுத்தாத முரட்டு முனிவர்.

 புராண துர்வாசரை துக்ளக் துர்வாசர் நல்லவராக்கி விட்டார்.

No comments:

Post a Comment