Saturday, July 17, 2021

மோடிக்கு இந்த பெருமை மட்டும்தான். சீச்சீ

 


தாலிபன்களால்  ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட புலிட்ஸர் விருது பெற்ற   ரெய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக்கின் மரணத்தை சங்கிகள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் எழுதியதை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



புகைப்படக் கலைஞரும் ஊடகவியாலாளருமான டேனிஷ் சித்திக்கி தாலிபான் கூட்டத்தினால் ஆப்கானிஸ்தானில் கொல்லப் பட்டிருகிறார். வழக்கம் போல் சங்கி மரண வியாபாரிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

பிரண்ட்லைனில் பல ஆண்டுகள் பத்தி எழுதியவரும், சமூக செயல்பாட்டாளருமான பிரபுல் பித்வாய் ஐரோப்பாவில் ஒரு நிகழவில் விருந்துண்ணும் போது மராடைந்தார். சங்க பரிவாரத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்த அவரது மறைவையும் கொண்டாடினார்கள். அதில் முக்கியமானவர் குஜராத்திலிருக்கும் ஒரு தொழிலதிபர். அவரது டிவிட்டர் கணக்கை பிரதமர் மோடி பின் தொடரும் அளவிற்கு முக்கியமானவர்.

கலைஞர் கருணாநிதி மறைந்த போது, இன்று பண்டிகைதான் என்று என் காதுபட பேசி மகிழந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த முட்டாள்களுக்கு ஒன்று புரிவதில்லை. சிலர் மறைந்தாலும் அவர்களின் சிந்தனைகளும் சாதனைகளும் மறைவதில்லை. அவர்கள் போட்ட விதைகள் விருட்சங்களாய் உலகில் தொடரும் என்பது வரலாறு.

தோழர் விஜயசங்கர் சொன்ன முட்டாள் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முட்டாள் ஒருவரின் ட்விட்டர் பதிவு கீழே உள்ளது.





மோடியோடு உள்ள புகைப்படத்தை முகப்பில் வைத்துள்ள இந்த பெண்மணியின் பதிவினை பலர் கண்டித்துள்ளனர் என்பது கொஞ்சம் நிறைவளிக்கிறது.




நீங்களும் உங்கள் தலைவரும் உங்கள் கூட்டமும் இதயமற்ற, வெட்கம் கெட்ட ஜந்துக்கள் என்று நானும் கடுமையாக திட்டி விட்டேன்.

பிகு: அவர் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என்பதை அவரது புகைப்படங்கள் சொல்கிறது. ஏற்கனவே கொஞ்சம் தரவிறக்கியுள்ளேன். இன்னும் கொஞ்சம் தேவை.அவை நாளை காலை.

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. மவுஸ் கிழிய கமெண்ட் போடற உன்னால ஒரிஜினல் அடையாளத்தோட வர முடியலை. மோடி ஆதரவாளன் என்று தெரிந்தால் காரி உமிழ்ந்துடுவாங்க என்ற பயம். அந்த பயம் இருக்கட்டும் பொறுக்கி. உன் வார்த்தைகளுக்காக இல்லை, நீ வைத்துள்ள பெயரில் தெரியும் வெறி உன்னை பொறுக்கி என்றே அடையாளம் காட்டுகிறது

    ReplyDelete