Friday, July 16, 2021

அசிங்கப்படாதே ஆட்டு அண்ணாமலை

 


ஆறு மாதங்களில் ஊடகங்களை ஒன்றியஅமைச்சர் எல்.முருகன் அடக்கி விடுவார் என்ற ஆட்டு அண்ணாமலையின் திமிர்த்தனமான, அதே நேரம் முட்டாள்தனமா பேச்சிற்கு ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கொடுத்த சூடு கீழே.

சிரிப்பு போலீஸ்
இன்று சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு நான் அளித்த சிறு பேட்டியில் சொன்னது:
முருகன் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராகி இருப்பதால் ஊடகங்களை நாம் 6 மாதத்திற்குள் கட்டுப்படுத்தலாம், கையிலெடுக்கலாம் என்று பிஜேபி தலைவர் அணணாமலை பேசியிருக்கிறார்.

முருகனின் அப்பா சிவபெருமானையே எதிர்த்துக் கேள்வி கேட்ட நக்கீரன் பரம்பரையில் வந்த பத்திரிக்கையாளர்களை இப்படி இவர் ‘மிரட்டுவது’ சிறுபிள்ளைத் தனமானது. சினிமாவில் வரும் சிரிப்பு போலீஸ் கூட இப்படிப் பேச மாட்டார்கள். வேலூர் ஜெயில வெள்ளையடிச்சு வாடகை விட்ட பரம்பரை நான் என்கிற சினிமா வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

இப்படி அசிங்கப்படுவதை விட அண்ணாமலை மீண்டும் ஆடு வளர்க்கவே சென்று விடலாம்.

No comments:

Post a Comment