Monday, February 8, 2021

அடுத்த சந்திப்பு நிகழவேயில்லை.

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கு இன்னொரு இழப்பு.

 அமைப்பினுடைய மாநிலக்குழு உறுப்பினர் தோழர் திருச்சி சரவணன், விபத்தில் காலமாகி உள்ளார். அவர் துப்பாக்கித் தொழிற்சங்கத் தலைவரும் கூட.

 அவர் ஒரு முறை எங்கள் மாநாட்டு கலை இரவுக்கு வந்துள்ளார். 2016 ம் ஆண்டு எங்கள் கோட்ட மாநாடு அரக்கோணத்தில் நடைபெற்ற போது மக்கள் ஒற்றுமை கலை விழா மேடையில் “அன்பென்று கொட்டு முரசே” என்ற தலைப்பில் உரை வீச்சு நிகழ்த்தினார்.

 தோழர் பாரதி கிருஷ்ணகுமார் உரையை கேட்பது போலவே இருந்தது. அப்படி ஒரு கம்பீரமான குரல். ஒரு மணி நேரம் பார்வையாளர்களை தன் உரையால் கட்டிப் போட்டிருந்தார்.

 


அந்த இரவே “மீண்டும் சந்திப்போம் தோழர்” என்று சொல்லி விடை பெற்றார். ஆனால் அந்த அடுத்த சந்திப்பு நிகழவில்லை. இனியும் நிகழாது என்பது துயரமே.

 செவ்வணக்கம் தோழர் சரவணன்

No comments:

Post a Comment