Monday, February 22, 2021

அண்ணாமலை, நீ போலீசா இருந்தியா? இல்லை?

 



பொள்ளாச்சி சம்பவங்கள் முடிந்து போனவை என்பதால் அவை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லியுள்ளார் ஆட்டுக்கார அண்ணாமலை.

 அவர் நிஜமாகவே போலீசாக இருந்தாரா என்றே சந்தேகம் வருகிறது. கொலை, திருட்டு, பாலியல் கொடுமை  போன்ற எல்லா குற்றச் செயல்களும் முடிந்து போனவைதான் என்பதால் அதைப் பற்றியெல்லாம் போலீஸ் விசாரிக்க வேண்டாம், குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டாம் என்று பதவியில் இருந்த போது சொல்லி இருப்பாரோ!

 இன்னொரு சந்தேகமும் வருகிறது.

 சாமி படத்தில் விக்ரம் சொல்வது போல இவர் போலீசாக இருந்திருப்பாரா அல்லது பொறுக்கியாக இருந்திருப்பாரா? இவரே ஏதாவது பாலியல் புகாரில் சிக்கிக் கொண்டு தப்பிப்பதற்காக போலீஸ் வேலையிலிருந்து ஓடி வந்திருப்பாரா?

 மூன்றாவது சந்தேகமும் உள்ளது.

 பொள்ளாச்சி சம்பவத்தில் இவருக்கோ அல்லது இவரைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதாவது தொடர்பு இருக்குமோ? அதனால்தான் இவர் அது பற்றி  பேசக்கூடாது என்று சொல்கிறாரோ?

No comments:

Post a Comment