Monday, February 22, 2021

புதுவை படுகொலை புதிதல்ல.

 



 

புதுவையில் வி.நாராயணசாமி அரசு கவிழ்ந்துள்ளது. முன்னாள் போலீஸ் அதிகாரியின் சட்ட விரோத நடவடிக்கையே இன்றைய ஜனநாயகப் படுகொலைக்கு அடிப்படை.

 மாநில அரசை கொஞ்சம் கூட மதிக்காமல் தன்னிச்சையாக மூன்று காவிகளை சட்டமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்து அவர்களுக்கு தானே பதவிப் பிரமாணமும் செய்து வைத்து படுகொலைக்கு அட்வான்ஸ் கொடுத்தார் கிரண் பேடி அம்மையார்.

 நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்பதை புதுவைக்கு மட்டும் மாற்றி படுகொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது மத்தியரசு. அந்த ஸ்கெட்சிற்கு அங்கீகாரம் கொடுத்தது உச்ச நீதி மன்றம்.

 காவிகள் காண்பித்த ஆசைக்கு அடிபணிந்து கொலைகாரர்களாக மாறினார்கள் ராஜினாமா செய்த சபலப் பேர்வழிகள்.

 மோடியின் ஆட்சியில் ஜனநாயகப் படுகொலைகள் புதிதல்ல.

 கோவா, மணிப்பூர், கர்னாடகா, மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் என்று அதன் கொடுங்கரங்கள் செய்த கொலைகள் எண்ணற்றவை.

 இப்போது நடந்துள்ளது புதுச்சேரியில்.

 ஜாதிக்கட்சிக்கோ, மதக் கட்சிக்கோ புதுவை மக்கள் இதுவரை இடம் கொடுத்தது கிடையாது. இனியும் ஆதரிக்க மாட்டார்கள் என்றே நம்புவோம்.

No comments:

Post a Comment