Wednesday, February 3, 2021

திரையில் நாயகி, நிஜத்தில் வில்லி

 


இப்போதே இவ்வளவு ஆட்டமென்றால்

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த செய்தி கீழே உள்ளது.

 உலகப் புகழ் பெற்ற பாடகி ரியான்னா மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்தவர். இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். ட்விட்டரில் இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடி.

இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசுவதில்லை என்று இவர் செய்த ட்வீட் லட்சக் கணக்கில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



 ரியானாவுக்கு மோடி வகையறாக்களின் பிரதான பிரச்சார பீரங்கியான நடிகை கங்கனா ரவுத் போட்டுள்ள பதிலை பாருங்கள்.

 


போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொல்வது மட்டுமல்ல, ரியானாவை வேறு “உட்கார் முட்டாளே, தேசத்தை விற்க நாங்கள் ஒன்றும் உங்களைப் போல டம்மிகள் அல்ல” என்று வேறு திட்டுகிறார்.

 ஆணவமும் திமிரும் கர்வமும் தலைக்கேறியிருப்பதால்தான் இப்படியெல்லாம் பேச முடிகிறது.

 இப்போதே ஆட்டம் இவ்வளவு ஓவராக இருக்கிறதே, நாளை இந்த பெண்மணியெல்லாம் அமைச்சரானால் எவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்?

 திரையில் நாயகியாக வலம் வந்தாலும் நிஜத்தில் சரியான வில்லி இவர்.

No comments:

Post a Comment