Thursday, February 4, 2021

“சச்சின் வடை” போச்சே காங்கிரஸ்!

 


பாவம் காங்கிரஸ் கட்சி!

சச்சின் டெண்டுல்கரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தீர்கள்.

 அது மட்டுமா இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வேறு அவருக்கு கொடுத்தீர்கள்.

 ஆனால் அவர் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா?

 உங்கள் கட்சியும்  ஆதரிக்கிற விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான நிலையை எடுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

 


கங்கணா ரணவத்தாவது அக்மார்க் சங்கி. இவருக்கு என்ன வந்தது?

 


மற்ற பல நடிகர்களுக்கும் இன்றைய கிரிக்கெட் வீரர்களுக்கும் தங்கள் எதிர்கால கலையுலக, விளையாட்டுலக வாழ்வை பாதுகாக்க ஆளும் கட்சிக்கு வால் பிடிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. அக்மார்க் சங்கி கங்கணா ரணவத்  பாணியில் ட்வீட் செய்ய வேண்டிய தேவையும .நிர்ப்பந்தமும் உள்ளது.

 


இவருக்கு என்ன அவசியம்?

 

ஓ! அமித்தின் மகன்தான்  கிரிக்கெட் வாரிய செயலாளர் அல்லவா? சச்சினுக்கு என்ன பசியோ! என்ன தேவையோ?

 

எந்த உள்நோக்கத்தோடு அவரை எம்.பி யாக்கி பாரத ரத்னா கொடுத்தீர்களோ, அதற்கு அவர் இனி பயன்பட மாட்டாரே!

 

ஆக உங்களுக்கு வடை போச்சே!

 பிகு 1: சச்சினுக்கு பாரத ரத்னா அவசியமில்லை என்று பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவின்

  இணைப்பு இங்கே உள்ளது 

 அதில் பெரும் பகுதியை குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டது. சச்சினைப் பற்றி கடுமையாக எழுதியதற்கு அப்போது பலர் கோபப்பட்டார்கள்.  அவரைப் பற்றிய என்னுடைய மதிப்பீடு சரிதான் என்பதை இப்போது காலம் வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டது.

 பிகு 2 : சங்கிகளின் கதறலுக்கும் நிர்ப்பந்தமாக பெறப்படும் கருத்துக் குவியலுக்கும் ரியானாவின் ஒற்றை ட்வீட்தான் காரணம். நம் நாட்டுப் பிரச்சினை குறித்து பேச அவர்கள் யார் என்று பொங்கி எழும் போலி தேச பக்தர்கள் கீழே உள்ளதற்கு குறைந்த பட்சம் குஷ்பு போல பஞ்சுப் பொங்கலாவது பொங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



பிகு 3 மேலே உள்ள ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட்

பிகு 4: இந்தியாவின் இறையாண்மைக்காக செயற்கைப் பொங்கல் பொங்கிய ஒரு பிரபலமும் இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மையாக இருக்கிற விவசாயிகள் பற்றி ஒரு வரி அளவிற்குக் கூட கவலைப்படவில்லையே!


1 comment:

  1. Shivaji rao'vum sachin'um orae maathiriyaana suya Nala pisaasunga. Oorukku oru nalla kaariyaam pannaathunga.
    Aanaa aalum katchikku tyre nakki thanakku vaendiyathai saathi chukkunga.

    ReplyDelete