Wednesday, February 24, 2021

அசிங்கமா போச்சா அமித்து?

 


அமித்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் நேற்று அசிங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தில் சர்வதேச சதி உள்ளது என்று போலியாக சித்தரிக்க சூழலியல் செயற்பாட்டாளர் டில்ஷா ரவி கைது செய்யப்பட்டார்.

சதி அம்பலமாகி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள்

அவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட டூல் கிட் தீங்கற்றது (INNOCUOUS என்ற வார்த்தை நீதிபதியால் பதிவு செய்யப்பட்டுள்ளது)

அதிலே வன்முறைக்கோ கலவரத்திற்கோ அழைப்பு விடுப்பது போல ஏதுமில்லை. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்கான சிறு முகாந்திரம் கூட இல்லை. ஜனவரி 26 அன்று நடைபெற்ற செங்கோட்டை நிகழ்வுகளுக்கும் அவரது அமைப்பிற்கும் சிறு துளி அளவு கூட தொடர்பில்லை என்றெல்லாம் நீதிபதி பதிவு செய்துள்ளார்.

அவர் மீது சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டிற்கும் சிறு ஆதாரம் கூட கிடையாது என்றும் சொல்லியுள்ளார்.

அவர் ஒரு தேச விரோதி, ஆன்டி இந்தியன், தூக்கில் தொங்க விட வேண்டும் என்றெல்லாம் பல "மத்யமர்கள்" கொந்தளித்தார்கள். அவர்களுக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

No comments:

Post a Comment