Wednesday, February 17, 2021

கிரண் பேடி நீக்கம் - மகிழ்ச்சியடைய ஏதுமில்லை

 


புதுவை துணை நிலை ஆளுனர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கப் பட்டதால் மகிழ்ச்சியடைய ஏதுமில்லை.

குதிரைகள் ஓடிப்போன பின்பு லாயத்தை பூட்டுவது போன்ற கதை இது.

ஒரு பாஜக சங்கியாக அவர் செய்ய வேண்டிய அனைத்து பேரழிவுகளையும் ஏற்கனவே செய்து முடித்து விட்டார். நியமன எம்.எல்.ஏ க்கள் தொடங்கி ஆட்சி அதிகாரத்தை சீரழித்தது, காங்கிரஸ் கட்சியை உடைத்தது போன்று அனைத்து நாசங்களையும் நிகழ்த்தி விட்டு இனி ஏதுமில்லை என்ற நிலையில்தான் அவர் புதுவையை காலி செய்துள்ளார்.

குதிரை பேரம் நிகழ்த்த கிரண் பேடியை விட தமிழிசை இன்னும் பொருத்தமாக இருப்பார் என்று அவர் கொண்டு வரப் பட்டுள்ளார். அவ்வளவுதான்.


No comments:

Post a Comment