Saturday, January 9, 2021

அங்க மாடாத்தான்யா பொறக்கனும்!

 


பாலியல் வன் கொடுமைகளின் மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் இரண்டு சம்பவங்கள்.

மாலை ஆறு மணிக்கு கோயிலுக்கு போன பக்தையை கோயில் அர்ச்சகரும் இன்னும் இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.

(அந்த பெண் தனியாக கோயிலுக்கு போனதுதான் தவறு என்று அம்மாநில மகளிர் ஆணையத் தலைவி சொல்லியுள்ள கொடுமை வேறு விஷயம்)

பாதுகாக்கப்பட்ட உயிரனமாக அறிவிக்கப் பட்டுள்ள கங்கை டால்பினை கொடூரமாக கொன்றுள்ளார்கள்.

அந்த மாநிலத்தில் மாடுகளைத்தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பில்லை.

எனவே உ.பி மாநில மனிதர்களே, ஏதாவது ஆபரேஷன் செய்து மாடாக மாற முடியுமா என்று முயலுங்கள்.

\

No comments:

Post a Comment