Saturday, January 23, 2021

மூளையில்லா விட்டாலும் திமிருக்கு மட்டும்

 அதென்னய்யா  After all

 

மத்யமர் குழுவில் ஒரு சங்கி அதி புத்திசாலி செல்லா நோட்டு விவகாரத்தால் இந்தியாவே மாறி விட்டது. ஊழல் ஒழிந்து விட்டது. கறுப்புப் பணம் அழிந்து விட்டது. பொருளாதாரக் குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் டுபாக்கூர் முல்லா தாஸ்  போல பொய்யான புள்ளி விபரங்களைக் கொடுத்து அளந்து விட்டிருந்தார்.

அதனை விமர்சனம் செய்தவர்களை எல்லாம் மூளை இல்லாதவர்கள் (Empty Head) என்று திட்டிக் கொண்டிருந்தார்.

மோடி உள்ளிட்டவர்களே இப்போதெல்லாம் செல்லா நோட்டு பற்றி பேசாமல் பதுங்கியுள்ள போது அதனை உயர்த்திப் பிடிக்கிற ஒரு பொய்யைப் பார்த்து கடுப்பாகி


“இந்த காமெடி படம் இன்னும் எத்தனை நாள் ஓடும்?”  என்று பின்னூட்டம் போட பார்ட்டி டென்ஷன் ஆகி விட்டது. சூடான விவாதமும் நடந்தது. கடைசியில் “நீயெல்லாம் ஒரு சாதாரண எல்.ஐ.சி ஊழியனாகவோ, முகவராகவோ இருப்பாய்,  உனக்கெல்லாம் என்ன தெரியும்?” என்ற ரீதியில் பேச கடுப்பாகி திட்டி விட்டேன்.

 



“என் பதிவை எப்படி காமெடின்னு சொன்ன?” என்பதுதான் அந்த சங்கியின் வாதம்.

 சங்கிகளுக்கு பொது அறிவும் கிடையாது, பொருளாதார அறிவும் கிடையாது.  

மூளையிட்டாவிட்டாலும் ஆணவமும் திமிரும் மட்டும் வானளவு.

என்ன செய்ய?

குறை குடங்கள்தானே கூத்தாடும்!

No comments:

Post a Comment