Tuesday, January 5, 2021

மோடியும் எடப்பாடியும் முன் வருவார்களா?

 


கொரோனா தடுப்பூசி பயன்பாடுக்கு வரப் போவதாக மத்தியரசு அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் திரை அரங்குகள் நூறு சதவிகித இருக்கைகளுடன் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 இந்தியாவில் அனைத்து கட்ட சோதனைகளும் முடியாத போது தடுப்பூசி போடத் தொடங்குவது சரியல்ல என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

 கொரோனா இன்னும் தொடர்கிற வேளையில் நூறு சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை அனுமதிப்பது ஆபத்திற்கு அழைப்பு விடுப்பதாகும் என்ற அச்சம் உலவுகிறது.

 எனவே மக்களுக்கு நம்பிக்கை அளிக்க

 மோடி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்,

 நூறு சதவிகித இருக்கைகளோடு திரையரங்குகள் செயல்படுகிற முதல் நாள், முதல் காட்சியில் மக்களோடு மக்களாக அமர்ந்து படம் பார்க்க எடப்பாடியும்

 முன் வரவேண்டும்.

 அடுத்தவர் தலையில் கட்டும் முன்பு அவர்கள் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளட்டும்.

 

No comments:

Post a Comment