Thursday, February 29, 2024

பல்லக்கு தூக்கி ப்ளாக்மெயில் செய்

 


தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனகர்த்தரை ப்ளாக்மெயில் செய்தமைக்காக பாஜக நிர்வாகிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் தலைமறைவாகி விட்டார்.

20 கோடி ரூபாய் பணம் தர வேண்டும், இல்லையென்றால் அவரது ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டியதுதான் பிரச்சினை.

இந்த போலிச்சாமியார்தான் மனிதர்கள் தூக்கும் பல்லக்கில்தான் பட்டிணப்பிரவேசம் போவேன் என்று அடம் பிடித்த இன்னொரு ஆதீனத்திற்கு வக்காலத்து வாங்கியவர். ஆட்டுக்காரனும் தலையிட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஜனாதிபதி கூட அழைக்கப்படாத புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட ஜனநாயகக் காவலர் இந்த ஆசாமி. சில நாட்கள் முன்பாகக்கூட ஆட்டுக்காரன் அங்கே போயிருந்தானாம். ஒரு வேளை அப்போதுதான் கேமராவை வைக்கச் சொல்லி ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருப்பானோ!

யார் கண்டது! honey trap என்று ஆங்கிலத்தில் சொல்வது போல ஆபாச வீடியோவுக்கான ஏற்பாடே கூட சங்கிகளே செய்திருக்கலாம். ஏனென்றால் எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடிய கட்சி பாஜக, அதன் தலைவர்கள் மோடி முதல் ஆட்டுக்காரன் வரை எல்லோருமே கேவலமானவர்கள்தான்.

இப்படிப்பட்ட கிரிமினல்கள்தான் இந்து மதக் காவலர்கள் என்று நம்பும் முட்டாள்கள் திருந்த வேண்டும். இந்துக்களின் பாதுகாப்பு இவர்களால்தான் கேள்விக்குறியாகிறது.

இன்னொரு கேள்வியை கேட்காமல் இப்பதிவு நிறைவு பெறாது.


இருபது கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் அளவிற்கு என்ன தவறு செய்தீர்கள் ஆதீனகர்த்தரே? உங்களை நம்பும் பக்தர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. சொல்லுங்கள். 

No comments:

Post a Comment