Tuesday, February 20, 2024

காலிஸ்தானை ஆதரிக்குதா அஸ்ஸாம் அரசு?

 



 

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து சில தினங்கள் முன்பு எழுதிய போது ஒரு சங்கி அனாமதேய நாய் ஒன்று “காலிஸ்தானிகளை ஆதரிக்கிறாயா?” என்று குரைத்து விட்டு போனது. பாஜக ஐ.டி விங் சொல்வதை அப்படியே நம்பும் முட்டாளுக்கெல்லாம் எதற்கு பதில் எழுத வேண்டும் என்று விட்டு விட்டேன்.

 

நேற்று முன் தினம் படித்த தகவலொன்று அஸ்ஸாம் பாஜக அரசுதான் காலிஸ்தானை ஆதரிக்கிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

 

காலிஸ்தான் ஆதரவாளர் என்று பஞ்சாப் அரசால் கைது செய்யப்பட்ட அம்ரித்பால்சிங் என்பவன் அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள திப்ரூகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

 

அந்த அறையில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட போது

 

சிம் கார்டுடன் கூடிய ஒரு ஸ்மார்ட் போன்,

ஒரு சாதாரண பட்டன் போன்,

ப்ளூ டூத் ஸ்பீக்கர்,

கீ போர்ட் ஒன்று,

உளவுக்கான பயன்படும் கேமராவுடனான ஒரு பேனா,

ஏராளமான பென் ட்ரைவுகள்

 

கிடைத்துள்ளது.

 

அந்த மாநிலத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் இத்தனை பொருட்களை அவன் இத்தனை நாள் பயன்படுத்தி இருக்க முடியுமா?

அப்படியென்றால் அஸ்ஸாம் அரசு அவனுக்கும் அவனது காலிஸ்தான் கோரிக்கைக்கும் உடந்தையாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

 

பாஜக ஆட்சி செய்யாத வேறு மாநிலத்தின் சிறையில் இது போல நடந்திருந்தால் சங்கிகள் எப்படியெல்லாம் குதித்திருப்பார்கள்! என்னவெல்லாம் பேசியிருப்பார்கள்! இவர்களின் கள்ள மௌனமே இவர்களும் கூட்டுக் களவாணிகள் என்பதை நிரூபிக்கிறது.

No comments:

Post a Comment