Wednesday, February 14, 2024

பிறகு என்ன எழவிற்கு டிமோ?

 


விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நேற்று திட்டவட்டமாக சொல்லி விட்டார்.

அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதென்றால் அதை நிறைவேற்றுவோம் என்று விவசாயிகளின் போராட்டத்தின் போது எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளித்தீர்கள்?

அப்படிப்பட்ட கோரிக்கை சாத்தியமில்லை என்றால் 2014 ல் அதை என்ன எழவிற்காக தேர்தல்  வாக்குறுதியாக அளித்தீர்கள்?

வாய் உள்ளது என்பதற்காக என்ன எழவை வேண்டுமானாலும் சொல்லி விட வேண்டியது, பின்பு முரட்டுத்தனமாக ஒடுக்குவது.

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இறந்ததற்கு பின் பாரத ரத்னா விருது கொடுத்தா, அவரது பரிந்துரையை நிறைவேற்றியது மாதிரி அர்த்தமாயிடுமா டிமோ?

உம்ம கூட ஒரே எழவா போச்சுய்யா….

 

No comments:

Post a Comment