Monday, February 19, 2024

ராஜினாமா –மோசடிக்கான ஒப்புதல் வாக்குமூலம்

 


சண்டிகர் மாநகராட்சி தேர்தல் முறைகேடாக நடந்ததற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது. இன்று வழக்கு விசாரணை வரவுள்ள நிலையில் மோசடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மனோஜ் சோன்கர்  என்பவர் நேற்று நள்ளிரவு பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

 


இவரது ராஜினாமாவே மோசடி நடந்தது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம். இந்த மனிதன் ராஜினாமா செய்வது மட்டும் போதாது. அந்த மோசடியில் தொடர்புடைய அனைவரும் அரசுப்பதவியோ, ஆட்சிப் பதவியோ அதை ராஜினாமா செய்ய வேண்டும், சிறையிலும் அடைக்கப்பட வேண்டும்.

 

1 comment: