Friday, February 9, 2024

திருமணங்கள் அப்படித்தான் அங்கே நடக்குதா?

 



 பொது சிவில் சட்டத்தை உத்தர்கண்ட் சங்கி அரசு அமலாக்கி, ஒரு ஆண் யாரையெல்லாம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

 அதன்படி திருமணம் செய்து கொள்ளக்கூடாதவர்கள்

 அம்மா

தந்தையின் விதவை மனைவி, அதாவது சித்தி,

அம்மாவின் அம்மா, (பாட்டி)

அம்மாவின் அப்பாவின் விதவை

அம்மாவின் அம்மாவின் அம்மா (கொள்ளுப்பாட்டி)

அம்மாவின் அம்மாவின் கணவரின் விதவை,

அம்மாவின் அப்பாவின் விதவை (சின்ன பாட்டி)

அப்பாவின் அம்மா (பாட்டி)

அப்பாவின் அப்பாவின் விதவை

அப்பாவின் அம்மாவின் அம்மா (கொள்ளுப்பாட்டி)

அப்பாவின் அப்பாவின் அப்பாவின் விதவை

மகள்

மகனின் விதவை

மகளின் மகள்

மகனின்  மகனின் விதவை

 

இது போல முப்பத்தி ஏழு உறவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

 


படிக்கவே குமட்டுகிறதல்லவா!

 இதில் அத்தையின் மகள், மாமனின் மகள் ஆகியவையும் இடம் பெறுகிறது.

 மேலே குறிப்பிட்டு:ள்ள படியான திருமணங்களை சட்டம் போட்டு அரசாணை வெளியிட்டு தடை செய்கிறார்கள் என்றால் உத்தர்கண்ட் மாநிலம் அவ்வளவு பிற்போக்காக அது போன்ற திருமணங்கள் நடைபெறும் மாநிலமாகத்தான் உள்ளதா?

 தமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற வில்லங்கம் எனக்கு தெரிந்து இரண்டு படங்களில்தான் நடந்துள்ளது. ஒன்று கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள், இன்னொன்று புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகன் கதை வசனம்  எழுதிய சிந்து சமவெளி.

 உத்தர்கண்ட் போல தமிழ்நாட்டில் அத்தை மகள், மாமன் மகளை திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டம் முன்பே இருந்திருந்தால் பாரதிராஜாவின் பல படங்கள் வெளி வந்திருக்காது.

 

 

No comments:

Post a Comment