Tuesday, February 6, 2024

ஜட்ஜய்யா, கொலை செய்ய தூண்டிய குற்றவாளியை???

 



சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்ததன் மூலம் மாநகராட்சி அதிகாரி ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளதாக மிகச்சரியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டித்துள்ளார்.

 அதெல்லாம் சரிதான் ஜட்ஜய்யா, அந்த அதிகாரி தானாகவே அந்த படுகொலையை செய்திருப்பார்னு நினைக்கறீங்களா?

 பதவியோ, பணமோ, மதமோ, ஏதோ ஒரு எழவை காண்பித்து அந்த ஜனநாயக படுகொலையை செய்ய யார் தூண்டினார்கள் என்பது பற்றியும் நீங்கள் பேச வேண்டாமா? ஜனநாயகப் படுகொலை என்று கண்டித்த பின்னும் அத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டாமா?

அதையெல்லாம் செய்யவில்லையென்றால், அதெல்லாம் இறுதித்தீர்ப்பில் வரவில்லையென்றால் “பேசும் போது நல்லா இலக்கணமா பேசு, பாட்டு எழுதற போது மட்டும் கோட்டை விட்டுடு” என்று தருமி சிவபெருமானிடம் சொல்வது போல “வழக்கு நடக்கற போது மட்டும் கண்டிங்க, ஆனா தீர்ப்பெழுதுபோது மட்டும் கோட்டை விடுங்க” என்று உங்களைப் பார்த்தும் காலம் சொல்லும். காஷ்மீர் வழக்கிலும் அப்படித்தானே நடந்தது!

No comments:

Post a Comment