Monday, February 5, 2024

செல்ஃபி பாயிண்ட் ரூ 1500 தான் டிமோ

 


ரயில் நிலையங்களில் செல்ஃபி பாயிண்ட் ஒன்று  அமைப்பதற்கு ஆறே கால் லட்ச ரூபாய் செலவாகிறது என்பது தகவல் அறியும் சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில். பதில் சொன்ன அதிகாரியை அந்த பதவியிலிருந்து தூக்கி விட்டார்கள் என்பதும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடாது என்று உத்தரவு போட்டதும் கிளைக்கதை.

 மேலே புத்தகம் போல உள்ள செல்ஃபி பாயிண்ட் தமுஎகச காட்பாடி கிளை, கடந்த டிசம்பரில் காட்பாடியில் நடத்திய புத்தகக் கண்காட்சியின் போது அமைக்கப்பட்டது. அழகாகத்தான் இருந்தது. இதற்கு என்ன செலவானது என்று அங்கே இருந்த பொறுப்பாளர் தோழர் ஸ்ரீராமிடம் கேட்டேன்.  பேனர், ஃப்ரேமுடன் சேர்த்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றார்.

 1500 ரூபாய் எங்கே இருக்கிறது! ஆறேகால் லட்ச ரூபாய் எங்கே இருக்கிறது!

 டிமோவின் மூஞ்சியோடு போட்டோ எடுக்க ஆறே கால் லட்ச ரூபாயை ரயில்வே வெட்டியாக செலவழிக்க வேண்டுமா?

 ஆக இவர்கள் செய்தது ஊழல், ஊதாரித்தனம்.

1 comment:

  1. ஒன்றிய அரசின் சார்பில் செய்யப்படும் ஒரு அமைப்பி ன் மதிப்பு குறைவாக இருக்க முடியுமா! அவைநாயகன்

    ReplyDelete