Thursday, February 29, 2024

கரும் புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை . . .

 

மதுரை மண்ணின் பெருமையாக, அடையாளமாக திகழும் எம்.பி தோழர் சு.வெங்கடேசன் அவர்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து ஒரு கோழை, அனாமதேய, அநாகரீக, அசிங்க, நேர்மையில்லாத, திருட்டுக் கூட்டம் "கண்டா வரச் சொல்லுங்க" என்றொரு சுவரொட்டி அடித்து ஒட்டு தோழர் சு.வெ, அந்த சுவரொட்டி முன்பாக கெத்தாக நின்று சுவரொட்டி ஒட்டிய அந்த திருட்டுக் கும்பலை "வா, வா" என்றழைக்கிறார்.


சமூகத்தில் ஒளிந்து கொண்டு அயோக்கியத்தனம் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலிப் பெயர்களில், அனாமதேயமாக வன்மம் கக்கும் ஜந்துக்கள்,

போலிப்பெயரில் மஞ்சள் பத்திரிக்கைகளில் எழுதும் அசிங்கப்பிறவிகள்,

மொட்டைக்கடிதம் மூலம் வளர்த்த மரத்தையே அசைத்துப் பார்க்க நினைக்கும் துரோகிகள்.

இவர்கள் அனைவரையும் கண்டறிந்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மீதேற்றி அம்பலப்படுத்த வேண்டும்.

ஒளிந்து கொண்டிருந்தாலும் மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்கத் தெரியாத மடையர்கள் இவர்கள். ஆகவே கண்டறிவது சுலபம். 

No comments:

Post a Comment