Tuesday, September 27, 2022

பூஜ்ஜிய ஆஜானின் “சர்க்கார்” அபத்தம்

 


ஆஜானும் ஏ.ஆர்.முருகதாஸும் திருடிய சர்க்கார் கதையில் காணப்பட்ட ஒரு அபத்தத்தைப் பற்றி அப்போதே வழக்கறிஞர் திரு ராஜகோபால் சுப்ரமணியன் எழுதிய பதிவை முன்னர் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

 

சுவாரஸ்யமான அந்த 

“ஜெயமோகன் கேட்ட லீகல் ஒப்பினியன்” 

என்ற பதிவை மேலே உள்ள இணைப்பின் மூலம் கொஞ்சம் படித்து விட்டு இங்கே மீண்டும் வாருங்கள்.

 அந்த சர்க்கார் படத்தை ஞாயிறன்று ஒரு லோக்கல் சேனலில் பார்த்தேன்.

 சுந்தர் ராமசாமி (அதாங்க விஜய்) யின் ஓட்டை கள்ள ஓட்டு போட்ட கௌசிக் (யோகி பாபு)  உடன் அவர் சண்டை போடும் போது

 நான் ஆயிரம் ஓட்டு போட்டேன். நீ ஆயிரத்தில் ஒருத்தன் (ஆஜான் வஜனம் புல்லரிக்குதுய்யா) என்பார் யோகிபாபு.

 அடுத்த வஜனம் இன்னொரு சிறப்பு.

 ஒரு வோட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் ப்ளஸ் ஜி.எஸ்.டி (கள்ள ஓட்டுக்கு கொடுக்கற காசுக்கெல்லாம் ஜி.எஸ்.டி வாங்கற நிர்மலா அம்மையார், பாஜக விலைக்கு வாங்கற எம்.எல்.ஏ க்களுக்கு கொடுக்கும் கோடிகளுக்கும் ஜி.எஸ்.டி வசூல் செஞ்சா, நாட்டில மத்த எதுக்குமே ஜி.எஸ்.டி யே அவசியமில்லையே!)

 இந்த மனிதன் என்றைக்காவது வாக்குச்சாவடி பக்கம் போயிருப்பாரா என்று தெரியவில்லை. அப்படி சென்றிருந்தால் ஒரு மனிதனால் ஆயிரம் கள்ள ஓட்டு போட முடியுமா என்பது தெரிந்திருக்கும். என்னத்தான் வாக்குச்சாவடி அதிகாரிகள், அனைத்துக் கட்சிகளின் முகவர்கள் எல்லோரையும் விலைக்கு வாங்கியிருந்தாலும் கூட சாத்தியமே இல்லாத ஒன்று. ஆயிரத்தில் ஒருவன் என்ற வசனத்துக்காக காவு கொடுக்கப்பட்ட யதார்த்தம் அது. பூத் கேப்சரிங் செய்தால் மட்டுமே அது சாத்தியம்.

 அடுத்து ஒரு ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய். ஆயிரம் ஓட்டுக்கு யோகிபாபு எவ்வளவு ரூபாய் வாங்கியிருக்க வேண்டும்?

 அதிகமில்லை ஜெண்டில்மேன் & வுமன், வெறும் அறுபது லட்ச ரூபாய்தான். அதானி, அம்பானியிடம் பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் கோடிக் கணக்கில் இருந்தாலும் கூட பாஜக கூட கள்ள ஓட்டு போட இவ்வளவு ரூபாய் கொடுக்க வாய்ப்பே இல்லை, வாக்காளர்களுக்கே இதை விட குறைவாக தருகிறார்கள்.

 மொத்தத்தில் திரு ராஜகோபால் சொன்னது போல எல்லாதுறையிலும் ஜெயமோகன் ஒரு பூஜ்ஜியம்தான்.

 ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறை போடச் சொல்லி (அதுதான் சரிப்பட்டு வரும் என்று அவரே எழுதியுள்ளார்) கை கொள்ளாமல் பணம் வாங்கிக் கொண்டு திருட்டுக்கதைக்கு வசனம் எழுதுவதில் கூட பொறுப்பில்லாத பூஜ்ஜிய ஜெயமோகன் இடதுசாரிகளைப் பற்றி பேசுவதில் மட்டும் பொறுப்பாகவா இருக்கபோகிறார்!

 அரைகுறை ஜெய்மோகன் எது பேசினாலும் அது ஆபத்தும் அபத்தமும் மட்டுமே!

 பிகு: அவரைபொன்னியின் செல்வன் படத்துக்கு வசனம் எழுத வைத்த மணிரத்னத்திற்கு அனுதாபத்தைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்!

 

4 comments:

  1. ஜெயமோகனும் மாலனும் உங்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். செம அடி

    ReplyDelete
  2. சரியாகவும், நன்றாகவும் சொன்னீர்கள் தோழர்..அடிக்கடி குத்து வாங்கி கொண்டேயிருப்பவர்கள் ஜெமோவும்., மாலனுமே

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. என்னடா நாயே, உயிரோடதான் இருக்கியா? இன்னிக்கு நான் பேசினதை உன் சைலண்ட் பார்ட்னர் கரெக்டா சொல்லிட்டார் போல. வெற்றிகரமாக நடந்ததில் உங்க கூட்டுக் களவாணி நாய்ங்க எல்லாருக்கும் வயிற்றெரிச்சல். நீங்க காண்டாயிட்டீங்க. அது போதும்டா. ஒரு இளிச்சவாயன் மாட்டினான்னு அவனை ஒட்டு மொத்தமா சுர்ண்டாதடா. இனியாவது அவன் பிழைச்சு போகட்டும். எனக்கு எழுந்து நடக்க மூச்சு வாங்குதா? ஏதாவது சொன்னா நீ தற்கொலை செஞ்சுக்குவே.

      Delete