Wednesday, September 21, 2022

என்னது? சீனா வலிமையான சவாலா?

 


மோடி வந்த பின்னாடி சீனா இந்தியாவைப் பாத்து பயந்து நடுங்குது. வாலை சுருட்டிக்கிட்டாங்க, மோடி பேரைச் சொன்னாலே சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் கிற்கு குளிர்க்காய்ச்சல் வந்துடும் (இதுக்கு மேல படிக்காதவன் படத்தில் சுமனைப் பார்த்த விவேக்கின் செய்கையைக் கூட) என்றெல்லாம் சங்கிகள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். திருட்டு சங்கிகள் எழுதுவதை முட்டாள் சங்கிகள் பரப்புகிறார்கள்.

இந்திய கப்பற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், இந்த மாயைகளை உடைத்து விட்டார். உண்மையை பொசுக்கென்று உடைத்து விட்டார்.

எல்லைப் பகுதியில் இருப்பதைப் போலவே சீனா கடல் பகுதியிலும் வலிமையான சவாலாகவே {Formidable Challange)  இருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதி முழுதுமே ஐந்திலிருந்து எட்டு போர்க்கப்பல்கள், ஏராளமான ஆய்வுக்கப்பல்கள், மீன்பிடிக் கப்பல்கள் என்று சீன மயமாக உள்ளது. கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் பணியை அவர்கள் துவக்கியதிலிருந்தே  கடலிலும் அவர்களின் ஆதிக்கம்தான்.

இதுதான் அவர் சொன்னது.

வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருந்தால் உண்மையான ஆபத்துக்கள் கண்ணிற்கு தென் படாது. மோடிக்கும் உண்மைக்கும் வெகு தூரம்.

எனவே இந்த ஆட்சியாளர்கள் நீடிப்பது இந்திய பாதுகாப்பிற்கு என்றும் சிக்கல்தான். 

No comments:

Post a Comment