Thursday, September 8, 2022

மோடியின் ஏவல் நாயாய் . . .

 


இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த செய்தி.

நேற்று வருமான வரித்துறை புது டெல்லியில் மூன்று இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. வேலுமணி, தங்கமணி போல ஊழல் மந்திரிகளின் வீடுகளில் அல்ல.

OXFAM INDIA

CENTRE FOR POLICY RESEARCH

PUBLIC SPIRITED MEDIA FOUNDATION.

இந்த மூன்றுமே தன்னார்வ அமைப்புக்கள். 

இதிலே OXFAM அமைப்பு உலக அளவில் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கை தரும் அமைப்பு. அதன் அறிக்கைகள் பல முறை பொருளாதார வளர்ச்சி குறித்து மோடி சொன்ன பொய்களை தகர்த்துள்ளது.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள், உரைகள் ஏற்பாடு செய்வது இரண்டாவது அமைப்பு.

இன்னமும் விலை போகாத இணைய தள இதழ்களுக்கு நிதி திரட்டுவது மூன்றாவது அமைப்பு.

இப்படியெல்லாம் சுயேட்சையான அமைப்புக்கள் செயல்படலாமா? அதனால்தான் மோடி தன் ஏவல் நாயான வருமான வரித்துறையை அங்கே ஏவி விட்டார்.

அதே போல மோசமான ஏவல் நாயாக மாறிப்போன இன்னொரு நிறுவனம் சி.பி,ஐ.  கண்ட நாயெல்லாம் அதற்கு மொட்டை பெட்டிஷன் அனுப்பும் அளவிற்கு அதன் மதிப்பு அதல பாதாளத்திற்கு போய் விட்டது.

No comments:

Post a Comment