Sunday, September 11, 2022

டோல்கேட் இரட்டைக் கொள்ளை

 


நேற்று சென்னை சென்றிருந்தேன்.

ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டில்  காலை எட்டு மணிக்கு கடந்த போது அதற்காக ஃபாஸ்ட் டேகில் கட்டணம் பிடிக்கப்பட்டதற்கான செய்தி தாமதமாக வந்தது. 

இரவு புறப்பட்டு வரும் வேளையில் பூந்தமல்லி அருகில் வரும் போது இன்னொரு செய்தி. காலை 8.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரை கடந்ததாக இன்னொரு 50 ரூபாய் பிடிக்கப்பட்டதாக அந்த செய்தி சொன்னது.

ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டில் குறுஞ்செய்திகளை காட்டினால் அங்கே இருந்த ஆள் "க்யா, க்யா" என்று சொல்ல

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாத ஆளோடு மாரடிப்பது நேர விரயம் என்று வந்து விட்டோம். 

டோல் கட்டணமே கொள்ளை. இதில் இப்போது இரட்டைக் கொள்ளை அடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

No comments:

Post a Comment