Friday, September 16, 2022

அன்னா ஹசாரே, கிரண் பேடி திருப்பித்தருவார்களா?

 


 

கர்னாடகத்தில் உள்ள முருக மடத்து சாமியார் பாலியல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட தகவலை படித்திருப்பீர்கள்.

 

அந்த மடத்தின் சார்பாக வழங்கப்பட்ட பசவய்யா விருதையும் விருதோடு சேர்த்து அளிக்கப்பட்ட ரூபாய் ஐந்து லட்சத்தையும் திருப்பித் தரப்போவதாக மூத்த ஊடகவியாளர் திரு பி.சாய்நாத் அறிவித்துள்ளார்.

 

சாய்நாத் மட்டும் அந்த பசவய்யா விருது தரப்படவில்லை. நவீன கும்பகர்ணன் அன்னா ஹசாரே, சங்கி போலீஸ் கிரண் பேடி ஆகீயோரும் அந்த சாமியாரிடமிருந்து பசவய்யா விருதைப் பெற்றுள்ளார்கள்.

 

அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

 

சாய்நாத்தைப் போல விருதை திருப்பித் தருவார்களா?

 

இல்லை

 

நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்று கமுக்கமாக விருதையும் பணத்தையும்  அவர்களே வைத்துக் கொள்ளப் போகிறார்களா?

 

இரண்டாவதிற்கான வாய்ப்பு அதிக. ஏனென்றால் இவர்களே பெரிய கேடிகள்தான். . . .     

No comments:

Post a Comment