Monday, September 5, 2022

சங்கிங்க பொழப்பை கெடுக்கறீங்களே!

 







நாங்கள் ஒற்றுமையாக வாழ்வது பரங்கிப்பேட்டை...
மத நல்லிணக்கத்துக்கு இதுதான் கோட்டை!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை 14வது வார்டுக்கு உட்பட்ட குருநாதசெட்டிமேட்டு தெருவில் அமைந்துள்ள செண்பக விநாயகர் ஆலயத்தில் 7ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் ஊர்வலத்தை
பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர் M.S முகமது யூனுஸ் அவர்கள் துவக்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.தேன்மொழி சங்கர் அவர்களும் மற்றும் இஸ்லாமிய நண்பர்களும் ஆலய நிர்வாகிகளும் ஊர்பொதுமக்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

மேலே உள்ள படங்களும் பதிவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு வின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

பாவம் சங்கிகள். இப்படியெல்லாம் ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் எங்கிருந்து கலவரம் செய்வார்கள்! எப்படி தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து ஆட்டுக்குட்டி சி.எம் ஆவது!

மக்கள் ஒற்றுமைதான் சங்கிகளை, மோடி வகையறாக்களை தனிமைப் படுத்தும்.

நம் சிந்தனையும் செயலும் அந்த இலக்கை நோக்கியே அமையட்டும்.


No comments:

Post a Comment