Tuesday, September 20, 2022

அம்பானி, அதானி மற்றும் கோயிந்தா

 


முகேஷ் அம்பானி கடவுள் முன்பாக கண்ணை மூடி பிரார்த்தனை செய்யும் படத்தை பார்த்திருப்பீர்கள். அவரது வேண்டுகோள் என்னவாக இருந்திருக்கும் என்று வாட்ஸப்பில் வந்த ஒரு கற்பனையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



 “கோயிந்தா, கோயிந்தா- இது உனக்கே நல்லா இருக்கா கோயிந்தா? நா உனக்கு என்ன கொற வச்சேன் கோயிந்தா? அதானிய 2 வது இடத்திலயும் என்ன 8 வது இடத்திலயும் வச்சுட்டியே கோயிந்தா!

 அபின் கடத்தி அவன் முன்னேறினா தண்டிக்க மாட்டியா கோயிந்தா? அவனுக்கு உதவி செஞ்சவன கை உட்று கோயிந்தா! உனக்கு 1001 உளுந்த வட மால போடறேன் கோயிந்தா! ம், வட மாலன்னு சொன்னதும் என்னிய சந்தேகப்படாத கோயிந்தா . . நிஜமாவே உளுந்த வட மாலயே போடறேன் கோயிந்தா!

 பிகு: என்னோட டவுட்: அனுமாருக்குத்தானே வடை மாலை போடுவாங்க! பெருமாளுக்கும் போடுவாங்களா?

1 comment:

  1. சாமி வடை சாப்பிடாது. அதனால் எந்த வடையாக இருந்தாலும் பரவாயில்லை கோவிந்தா.

    ReplyDelete