Friday, April 19, 2019

பாமக - நிமிராத வால்


நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழி பாட்டாளி மக்கள் கட்சிக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

அவர்களின்  ஆதிக்க ஜாதி  உணர்வும்
தலித் மக்களுக்கு எதிரான பகைமையும்
நாடி, நரம்பு, ரத்தம், புத்தி அனைத்திலும் ஊறியுள்ள வன்முறையும் 

அவர்களை விட்டு என்றென்றும் அகலப் போவதில்லை 

என்பதைத்தான்

நேற்று சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் குடியிருப்பின் மீது நடந்துள்ள தாக்குதல் நிரூபித்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர்களும் தாக்குதலை நிகழ்த்தியவர்களும் ஏழை எளிய உழைப்பாளி மக்கள்தான்.

ஜாதிய வெறியேற்றி அவர்களை உசுப்பேற்றியே வைத்திருந்தால்தான் டாக்டரய்யாக்களின் பிழைப்பு ஓடும். 

தமிழக அரசியல் களத்திலிருந்து பாமக வை புறக்கணித்து வைத்திருந்தால் மட்டுமே அவர்களின் கொட்டம் அடங்கும்.

குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை அவ்வப்போது கூட்டணியில் இணைத்து வைத்துக் கொள்ளும் இரு கழகங்கள் உறுதியான முடிவெடுத்து விட்டால் தமிழகத்திற்கு நல்லது. 

2 comments:

  1. PMK will never join with DMK anymore

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete