Thursday, April 18, 2019

சாலைக் கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுப்போம்




கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வசதியாகவும்
அதிகமான கமிஷன் அடிக்கவும்
பிறகு டோல்கேட் என்ற பெயரில் மக்களை சூறையாடவும்

கொண்டு வரப்பட்ட திட்டம் “எட்டு வழிச்சாலைத் திட்டம்’

பாஜகவிலே மோடியை விட மிகப் பெரிய மோசடிப் பேர்வழிகள் யார் என்ற பட்டியல் எடுத்தால் அதிலே முதல் இடம் பெறக்கூடிய மோசடிப் பேர்வழி நிதின் கட்கரி.

நிதின் கட்கரி போடும் திட்டங்கள் எல்லாமே அரசு கஜானாவை கொள்ளையடித்து தன் வீட்டு கஜானாவை நிரப்புகிற திட்டங்கள்தான். சாகர் மாலா திட்டம் தொடங்கி கோதாவரி காவிரி இணைப்பு என்று அந்த மனிதன்  முழங்கும் அனைத்து திட்டங்களின் பின்னணி கொள்ளை கொள்ளை தவிர வேறொன்றுமில்லை.

அப்படி ஒரு திட்டம்தான் “எட்டு வழிச்சாலைத் திட்டம்”

கட்கரி போட்ட எலும்புத் துண்டுகளின் எண்ணிக்கை அதிகமானதால் கொழுத்துப் போன எடப்பாடி அதை எப்படியாவது நிறைவேற்ற துடித்தார் என்பது ஊரறிந்த அதிசயம்.

வெட்டித்தனமான ஒரு திட்டத்திற்காக

விவசாய நிலம், ஏரி, குளம், மலை, மரங்கள் என்று மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் எச்.ராசாவின் ஹைகோர்ட்டே போச்சு என்று அடாவடியாக திட்டத்தை அமலாக்க துடித்தார். எதிர்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்தார். நிலத்தை பறி கொடுத்து வெகுண்டெழுந்த பெண்களை விபச்சார வழக்கு போடுவோம் என்ற அளவிற்கு காக்கிச்சட்டைகள் அராஜகம் செய்தது.

கடைசியாக உயர் நீதி மன்றம் தடை உத்தரவு போட்டுள்ளது.

ஆனாலும் நிதின் கட்காரி  ஆணவமாகச் சொல்கிறார்.

“எட்டு வழிச் சாலை” அமைத்தே தீருவோம் என்று.
எடப்பாடி முதல் டாக்டரய்யாக்கள் வரை அதை இளித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம்

சிம்பிள்

எலும்புத்துண்டுகளுக்கான விசுவாசமன்றி வேறென்ன?

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கொள்ளையடிக்கும் சாலைக் கொள்ளைக்காரர்களுக்கு  சமாதி கட்டுவோம்.

பாஜக, அதிமுக, பாமக், தேமுதிக கூட்டணியை தோற்கடிப்போம்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்



No comments:

Post a Comment