Tuesday, April 30, 2019

மனோகர் பாரிக்கர் மரண மர்மம்




வெடிகுண்டு சாமியார் சாத்வி பிராக்யா தான் ஒரு கேன்ஸர் சிறப்பு மருத்துவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

கோமியத்தின் மூலம் கேன்ஸரை குணமாக்க முடியும் என்பதற்கான வாழும் சாட்சியாக இருக்கிற வெடிகுண்டு சாமியார், இப்போது கேன்ஸர் எப்படி வருகிறது என்பதை கண்டறிகிற விஞ்ஞானியாகவும் மாறி விட்டார்.

ஆமாம்.

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு புற்று நோய் எப்படி வந்தது என்பதை அவர் விவரமாக சொல்லியுள்ளார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வட கிழக்கு மாநிலங்கள், தென் மாநிலங்கள் மற்றும் கோவாவில் மாட்டிறைச்சி சாப்பிடப் படுவதை தடை செய்வார்களாம். கோவாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு அனுமதி கொடுத்த காரணத்தால்தான் மனோகர் பாரிக்கருக்கு கேன்சர் நோயே வந்ததாம்.

ஜெயிலில் இருக்கும் போது கம்பி எண்ணுவதற்குப் பதிலாக இப்படியெல்லாம் டிசைன் டிசைனா யோசிச்சிருப்பாங்களோ?

மாட்டிறைச்சி சாப்பிட அனுமதி கொடுத்த மனோகர் பாரிக்கருக்கே கேன்சர் வந்தது என்றால் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு என்ன வரும் என்ற அடுத்த ஆய்வறிக்கையை விரைவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.


1 comment:

  1. மோடியை தோற்கடிக்க இந்தம்மா போதும்

    ReplyDelete