Monday, April 1, 2019

வொய் கள்ள மௌனம் மேஜர் மாலன்?

கீழே நீல நிறத்தில் உள்ளது காவிகளின் இலக்கியப் படை ஸ்லீப்பர் செல் ஜெயமோகன், காவிகளின் இலக்கியப் படையின் நேரடி தளபதியான மேஜர் மாலன் மீது தொடுத்துள்ள தாக்குதல்.

இதற்கு மேஜர் மாலன் ஏன் எதிர்வினையாற்றாமல் கள்ள மௌனம் சாதிக்கிறார்?

சமஸ் உடைய பதிவுக்கு  அவரே சென்று பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் குறித்த கருத்துக்கு எதிரான சண்டை போடுகிற மாலன், தன்னைப் பற்றிய வசைக்கு ஏன் பதில் சொல்லவில்லை?

என்ன இருந்தாலும் தன்னுடைய கட்சிக்காரர் என்ற பரிவு காரணமாக இருக்குமோ? 






சிற்பி இன்றைய தமிழிலக்கியம் மீது ஊழ் விடுத்த தீச்சொல்,  ஒர் அழிவுசக்தி என்பது என் எண்ணம். தமிழண்ணல், பாலா, சிற்பி இப்போது மாலன் என நமக்கு எப்போதுமே இத்தகைய சிறுமதியாளர்களே வாய்க்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் உருவாக்குவது ஒரு பண்ணையடிமைமுறையை. அதை ஏற்று செருப்புதாங்குபவர்களின் ஒரு படையை இலக்கியவாதிகளாக முன்வைக்கிறார்கள்.



இந்திய நவீன இலக்கியங்களில் மகாபாரதத்தின் தாக்கம்’ என ஒரு கருத்தரங்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சாகித்ய அகாதமியால் நடத்தப்பட்டது. அதன் தலைவர் மாலன். அதில் அவரோ கலந்துகொண்ட பிறரோ ஒரு வார்த்தைகூட வெண்முரசு என்னும் நாவல் இங்கே எழுதப்படுவதைப்பற்றி பேசவில்லை. உண்மையில் பலருக்கு தெரிந்திருக்கவுமில்லை. மாலன் மகாபாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டதாக குறிப்பிட்ட அ.மாதவையாவின் ‘கண்ணன் பெருந்தூது’ என்னும் சிறுகதை  மகாபாரதம் பற்றியதே அல்ல – அது ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் பிராமணப்பெண்களை பகடி செய்யும் ஒரு கதை. இந்தக்கும்பல் சொல்லாததனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை, எக்காலமும் அந்த வட்டத்திற்குள் நான் செல்லப்போவதுமில்லை. ஆனால் அரசின் நிதியுதவியுடன் நடக்கும் ஒரு நிகழ்வில் பங்கெடுக்கும் ஒருவரின் அறிதலுரிமைக்கு நிகழ்த்தப்படும் சிறுமை இது.

7 comments:

  1. ஒரே கல்லுல இரண்டு மாங்காயா?

    ReplyDelete
  2. சுவன பிரியன்April 2, 2019 at 12:03 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஆபாச வார்த்தைகள் வேண்டாம்

      Delete
  3. யாரு இவங்க ?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, மரண பங்கம். ஜெமோ மட்டும் இதைக் கேட்டால் .................... ஹாஹா ஹாஹா ஹாஹா

      Delete
    2. ஜெயமோகன் - எழுத்துலகச் சக்ரவர்த்தி
      மாலன் - ஊடக உலகின் தளபதி

      யார் சொன்னாங்க?

      அவங்களே சொல்லிக்கிட்டாங்க

      Delete
  4. ஜெயமோகன் தன்னை பெரிய எழுத்தாளர் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அவரைப் பற்றி தெரியாதவர்கள்தான் அதிகம்

    ReplyDelete