Wednesday, April 3, 2019

அயோக்கியத்தனம் - தினமலரின் வாடிக்கை


கோவை துடியலூர் சிறுமி பாலியல் வன் கொடுமை மற்றும் கொலை வழக்கின் குற்றவாளி சந்தோஷ் பாரத் சேனா என்ற காவி அமைப்பைச் சேர்ந்தவன் என்பது ஊரறிந்த உண்மை.



அவன் என் கட்சியிலிருந்து பாரத்  சேனாவிற்கு தாவி விட்டான் என்று இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் அவசரம் அவசரமாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.



உண்மை இவ்வாறு இருக்க, அந்த வெறியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச்செயலாளராக இருந்தானென்று தினமலர் ஒரு பொய்ச்செய்தி வெளியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிளையே இல்லாத ஊரில் எப்படி ஐயா ஒரு முன்னாள் கிளைச்செயலாளர் இருக்க முடியும்?

காவிகளை பாதுகாக்க எந்த அளவும் கீழிறங்க தயாராக  உள்ள பத்திரிக்கை தின மலர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.

எத்தனை திட்டினாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத எருமை மாட்டு தோல் போர்த்திய பத்திரிக்கை தினமலர்.

எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் அ.கரீம் தினமலருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


அதே போல தமுஎகச அமைப்பின் கோவை மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான தோழர் மு.ஆனந்தனும் ஒரு விரிவான வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.







ஆனால் தினமலரைப் பொறுத்தவரை

கோர்ட்டாவது எச்.ராசாவாவது

என்ற ரீதியில் சந்தோஷ் குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கிடையாதாம் என்று சொல்கிறார்களாம் என்ற ரீதியில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.



இந்த கீழ்த்தரமான பத்திரிக்கை வெளியிட்ட பொய்ச் செய்தியைதான் சமூக வலைத்தளங்களில் காவிகள் பரப்பினார்கள். ஆனால் தனக்கு என்னமோ சம்பந்தமே இல்லாதது போல் மேலேயுள்ள செய்தியை வெளியிட்டுள்ளது ஊடக அயோக்கியத்தனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்க முடியாத அளவிற்கு ஆணவம் தலைக்கேறிப் போயுள்ளது.

தமிழக மக்கள் முழுதும் இந்த நாளிதழை புறக்கணித்தால் மட்டுமே அதன் திமிர் அடங்கும்.

7 comments:

  1. "தமிழக மக்கள் முழுதும் இந்த நாளிதழை புறக்கணித்தால் மட்டுமே அதன் திமிர் அடங்கும்."
    .
    ஒரு சீட்டுக்கு கூட வக்கில்லாத கம்யூனிஸ்ட் நீ சொல்லி நாங்க கேட்கணுமா ?

    இப்படிக்கு
    தமிழ்நாட்டு மக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். பொம்பளைப் பொறுக்கிங்களுக்கு மஞ்சள் பத்திரிக்கைதான் படிக்கும். தினமலர் படிக்கிறவனுங்களும் அவங்களை மாதிரியே கேவலமான ஜென்மங்கள்தானே.

      Delete
    2. எனக்கு தெரிஞ்ச ஒரே மஞ்சள் பத்திரிக்கை நெற்றி கண் தான்

      அது எல்லாம் இருக்கட்டும் நீங்கள் மஞ்சள் பத்திரிகையாக கருதும் தமிழ் பத்திரிகைகளை லிஸ்ட் தர முடியுமா ?

      ஏனென்றால் உங்கள் வசதிக்கு தகுந்தபடி லிஸ்ட் ஒவ்வொருநாளும் மாறிக்கிட்டே போகுது

      Delete
    3. enna pathila kanom?

      Delete
    4. ஆபாசச் செய்தி, பொய்ச்செய்தி வெளியிடுகிற பிழைப்புவாத பத்திரிக்கைகள் எல்லாம் மஞ்சள் பத்திரிக்கைகள்தான். அந்த பட்டியலில் முதலிடம் தின மலருக்குத்தான்

      Delete
  2. இருபத்தி நான்கு மணி நேரமும் இணைய தளத்திலே இருக்குமளவிற்கு நான் வெட்டியாக இல்லை. அலுவலக நேரத்தில் வருவது கிடையாது.

    ReplyDelete
  3. தினமலர் பத்திரிக்கைகாக வாதாடுபவன் புத்தியும் அந்த பத்திரிக்கை மாதிரிதான் இருக்கும்

    ReplyDelete