Saturday, April 27, 2019

ஆமாம்யா. நீ மோசமான வேட்பாளர்தான் . . .




பாஜகவின் எர்ணாகுளம் தொகுதி வேட்பாளரும் மோடியின் அமைச்சருமான அல்போன்ஸ் கண்ணன்தானம் என்பவர் மம்முட்டியை முதிர்ச்சி இல்லாதவர் என்று பொங்கி உள்ளார்.

காரணம் ரொம்ப சிம்பிளானது.

தேர்தலன்று எர்ணாகுளம் தொகுதியில் மம்முட்டி வாக்களித்து விட்டு வந்ததும் அங்கே மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் பி.ராஜீவ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோர் இருந்துள்ளனர்.

யாருக்கு வாக்களித்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மம்முட்டி, சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களுமே நல்ல வேட்பாளர்கள்தான். ஆனால் எனக்கு ஒரு வோட்டு உண்டு. அதனால் ஒருவருக்கு மட்டுமே நான் வாக்களித்தேன் என்று சொல்லியுள்ளார்.

இந்த பதிலுக்குத்தான் அல்போன்ஸ் கண்ணன்தானம் பொங்கியுள்ளார்,

“எர்ணாகுளத்தில் மூன்று வேட்பாளர்கள் உள்ள போது சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நல்ல வேட்பாளர்கள் என்று மம்முட்டி சொன்னால் என்ன அர்த்தம்? அப்படியென்றால் நான் மோசமான வேட்பாளரா? மோகன்லாலை நான் சந்தித்து இவரை சந்திக்கவில்லை. அதனால்தான் என்னை மம்முட்டி இழிவுபடுத்தி உள்ளார். இது அவர் முதிர்ச்சியற்றவர் என்பதை காண்பிக்கிறது”

இந்த மனிதன் பற்றி யாராவது கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லியிருந்தாலாவது இவர் பொங்கி இருந்தால் அதிலாவது கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும். ஒருவேளை இவரும் அங்கே இருந்திருந்தாலாவது கோபப்படுவதில் நியாயம் இருந்திருக்கும்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இவரே பொங்கி இவர்தான் முதிர்ச்சி இல்லாதவர் என்று அம்பலப்பட்டுள்ளார்.

“ஆமாம்யா, நீ மோசமான வேட்பாளர்தான். இப்ப என்னாங்கிற”

என்று மம்முட்டி பதிலளித்து விட்டால் நன்றாக இருக்கும்!

அப்படிச் சொன்னாலும் தவறில்லை.



ஏனென்றால் புலாவாமாவில் கொல்லப்பட்ட ஒரு கேரளத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை வீரரின் சடலத்தோடு செல்பி எடுத்துக் கொண்ட பேர்வழி இவர்


4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இவனெல்லாம் ஒரு ஆளு

    ReplyDelete
  3. இவனெல்லாம் ஒரு ஆளு

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete