Wednesday, April 17, 2019

அனிதாவை கொன்றவர்களை துரத்தியடிப்போம்



பாஜக- அதிமுக கூட்டணியை தமிழகத்திலிருந்து துரத்தி அடிக்க மூன்றே காரணங்கள் போதும்.

அதில் முதல் காரணத்தை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்தார்கள்.

தமிழகத்தின் மருத்துவக் கல்லூரி இடங்களை லட்சங்களை அள்ளிக் கொடுத்து சிறப்பு கோச்சிங் சென்றவர்கள் மட்டுமே பெற வழி செய்தார்கள். அனிதா போன்று பல ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை கருக்கி மரணத்தை பரிசாக அளித்த கொடியவர்கள்.

நீட் வேண்டாம் என்றவர்களை “தமிழகத்தில் தேர்வு மையம் இருந்தாலே போதும்” என்று சொல்லுமளவிற்கு வேறு மாநிலங்களுக்கு அலைய விட்டு அவஸ்தை கொடுத்த குரூர புத்தி கொண்டவர்கள்.

மோடி மீண்டும் வந்தால் நீட் அகற்றப்படும் என்று பொன்னார் போன்றவர்கள் பசப்பிக் கொண்டிருந்தார்கள்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் நீட் அகற்றப்படும் என்று காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் உறுதி மொழி அளித்ததும், நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை என்று தமிழிசை பம்மினார்.

ஆனால் “நீட் “ தொடரும் என்று பாஜகவின்ப் பியூஷ் கோயல் ஆணித்தரமாக தெரிவித்து விட்டார்.

இன்னும் பல அனிதாக்கள் உருவாகாமல் இருக்க அனிதாவைக் கொன்ற பாஜக, அதுமுக கூட்டணியை தமிழகத்திலிருந்து துரத்தி அடிப்போம்.

No comments:

Post a Comment