Friday, April 19, 2019

பிகானீரில் பாஜக கறுப்பு பலூன்கள்



கறுப்புக் கொடி, கறுப்பு பலூன் மரியாதையெல்லாம் மோடிக்கு மட்டுமல்ல, மோடியின் அமைச்சர்களுக்கும் கிடைக்கும் என்பதை நேற்று ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

கறுப்புக் கொடி, கறுப்பு பலூன் மரியாதை பெற்ற அந்த மோடியின் அமைச்சர் பெயர் அர்ஜூன்ராம் மேக்வால், நீர்ப்பாசனத்துறை இணை அமைச்சர். 

அவருக்குத்தான் நேற்று பிகானிரில் அத்தொகுதியில் மக்களவை வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற போது கிடைத்துள்ளது.

அவருக்கு அந்த கறுப்புக் கொடி, கறுப்பு பலூன் மரியாதை  அளித்தது யார் என்பதுதான் இங்கே செய்தி.

ஆம்.

கருப்புக் கொடி காண்பித்து கறுப்பு பலூன் களை பறக்க விட்டது அவரது சொந்த கட்சியினர்தான். 

மூன்றாவது முறையாக அவருக்கு சீட் கொடுக்கப் பட்டதைக் கண்டித்து பாஜக கட்சி ஆட்கள்தான் அங்கே கறுப்பு மரியாதை கொடுத்துள்ளார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டின் பெயரில் கொலைகள் நடந்த போது அதை நியாயப்படுத்தியது மட்டுமல்ல, மோடியின் புகழ் வளர்வதையே இச்சம்பவங்கள் உணர்த்துகிறது என்று பெருமை பேசிய மனிதன் இந்த மனிதன்.



பாஜக காரர்கள் மட்டுமல்ல, பிகானிர் தொகுதி வாக்காளர்களும் இந்தாளுக்கு கறுப்பு மரியாதை கொடுத்து தோற்கடிக்க வேண்டும். 


No comments:

Post a Comment