Friday, June 15, 2018

கஸ்தூரி அம்மையாரெல்லாம் சமூக ஆர்வலராம் . . .

சமூக ஆர்வலர் என்று ஊடகங்களால் அழைக்கப்படுகிற கஸ்தூரி அவர்களின் சமூக சிந்தனை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு அவர் ட்விட்டரில் போட்டுள்ள பதிவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.




மாற்றுப் பாலினத்தவர் என்றும் திருநங்கை, திருநம்பி என்றும் அழைக்கப்படுகிற இந்த காலகட்டத்தில் அவர்களின் சமூக நிலைமை மேம்பட வேண்டும் என்ற உணர்வு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்கிற சூழலில் இப்படி அவர்களை பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. கேவலமானது.

இதனை காமெடியாக வேறு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். 

தீண்டாமை வன் கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிக்கு எதிராக தலித் அமைப்புக்கள் நடத்திய பேரணியின் போதும் இப்படித்தான் வக்கிரத்தைக் கக்கினார். 

இப்படிப்பட்ட புத்தி உடையவர்கள் சமூக ஆர்வலர்கள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது !!!!!!

2 comments:

  1. அந்தம்மா பொம்பளை எஸ்.வி.சேகர்

    ReplyDelete
  2. இதனை காமெடி என்பது டிராஜடியே.

    ReplyDelete