Monday, June 25, 2018

சுஷ்மான்னாலும் காவிங்க அடிப்பாங்களாம் . . ..

அநேகமாக இந்த நான்காண்டுகளில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செய்த ஒரே நல்ல காரியம்

உ.பி மாநிலத்தில் மத வெறி பிடித்த ஒரு பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியால் மறுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை கலப்பு மனம் செய்த தம்பதிகளுக்கு அளித்ததும் அந்த அதிகாரிக்கு மாற்றல் வழங்கியதும்தான்.

ஆனால் இந்த சின்ன விஷயம் கூட காவிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் கூடாரத்தின் முக்கிய தலைவராக இருந்தும் எவ்வளவு கேவலமாக தாக்க முடியுமோ, அவ்வளவு கேவலமாக தாக்கியுள்ளனர்.

மாதிரிக்கு சில

இரவல் கிட்னியில் வாழும் அந்தப் பெண்மணி கிட்டத்தட்ட செத்துப் போனவர்.

பாகிஸ்தானை இதயத்தில் வைத்துள்ள அவர் எப்போது வெளியே வந்தாலும் அவரை கொல்ல வேண்டும்.

உங்களுடையது இப்போது இஸ்லாமிய கிட்னி என்பதால் இப்படியா? 






காவிகள் எவ்வளவு வெறி பிடித்தவர்கள் என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

சுஷ்மாவிற்கும் இப்போது புரிந்திருக்கும்.




No comments:

Post a Comment