Thursday, June 21, 2018

த.நா போலீஸால் இதுதான் முடியும் . . .


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று முன் தினம் தூத்துக்குடியில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தியது.

முதலில் காவல் துறை அனுமதி மறுத்தது. பிறகு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி பெற்றது. விசித்திரமான நிபந்தனைகள் வேறு விதிக்கப்பட்டது. தோழர் பிருந்தா காரத் மற்றும் தோழர் உ.வாசுகி ஆகிய இரு தலைவர்கள் மட்டும்தான் பேச வேண்டும். ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என இரண்டு நிபந்தனைகளை விதித்தது.

ஆயிரம் பேருக்கு பதிலாக 1,720 பேர் கலந்து கொண்டார்கள் என்று சொல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழுவின் செயலாளர் தோழர் கே.எஸ்.அர்ச்சுணன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. 

புகார் கொடுத்தது யார் தெரியுமா?

சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர்தான்.

எஸ்.வி.சேகரை கைது செய்ய துப்பில்லாத,
கொலை, கொள்ளை குற்றங்களை தடுக்க கையாலாகாத,
ஆளும் கட்சி,
மணற்கொள்ளையில் பங்கு வாங்குகிற,
ஆளும் கட்சி கிரிமினல்களுக்கு பாதுகாப்பு அளிக்கிற

தமிழ்நாடு போலீஸால்

மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்யவும்

அவர்கள் மீது வழக்கு போடவும்

மட்டும் முடிகிறது.

சீருடை அணிந்த சமூக விரோதிகளாய் மாறிக் கொண்டிருக்கின்றனர்.



2 comments:

  1. சிவராஜ் சித்தவைத்தியர் சேலம்June 22, 2018 at 12:51 PM

    பிணம் தின்னி பேய்கள்

    ReplyDelete
  2. போலீஸ் படுகொலை செய்தது.

    ReplyDelete