Friday, June 1, 2018

கச்சநத்தம் - இதுவே இறுதி நிகழ்வாகட்டும்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின்   முகநூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

பொறுப்புணர்வோடு செயல்பட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்களுக்கு பாராட்டுக்கள்.





கச்சநத்தம் களம்
-------------
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது சாதி ஆதிக்கவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் திரு. சண்முகநாதன், திரு. ஆறுமுகம், திரு.சந்திரசேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

மதுரை அரசு மருத்துவ மனையில் இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.முருகவேல்ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட போராட்டக்குழு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டது. பல்வேறு திருப்பங்கள், இடையூறுகளை கடந்து கோரிக்கைகள் வென்றெடுக்கப் பட்டுள்ளன.

போராடத்தின் பங்கேற்க 30 ம் தேதி வருகைதந்த தோழர்.பெ.ஜான்பாண்டியன் அவர்கள் போராட்டகுழுவோடு தன்னை இணைத்துக்கொண்டு  சிறப்பான பங்களிப்பு செய்தார்.


தோழர்.பெ.ஜான்பாண்டியன்    அவர்களோடு போராட்டக்குழு தலைவர், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.முருகவேல்ராஜன் மற்றும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர்.க.பாலபாரதி (சி.பி.எம்), தோழர்.ஆர்.கிருஷ்ணன்(சி.பி.எம்)  தோழர்.குணசேகரன்(சி.பி.ஜ)

தோழர்.எம்.கந்தசாமி மாவட்ட செயலாளர்( சி.பி.எம்) தோழர்.கண்ணகி  வட்ட செயலாளர்(சி.பி.ஜ) தோழர்.இன்குலாப் மாவட்ட செயலாளர் (வி.சி.க)ஆகியோடு  தீ.ஒ.மு சார்பில் நானும் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் மிகுந்த பயன்அளித்தது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலமாக 

1.விடுபட்டிருந்த உண்மை குற்றவாளிகள் பெயர்கள் FIR ல் இணைக்கப்பட்டன.

2.புகார்களை அலட்சியம் செய்து வந்த சார்பு ஆய்வாளர்கள் செல்வம்,ஜானகிராமன் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

3.கச்சநத்தம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைப்பது.

4.கச்சநத்தம் கிராமத்தில் முத்துசேர்வை என்பவர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்பது.

5.தீவிர சிகிச்சை தேவைப்படுகிற மலைச்சாமி,சுகுமாறன் ஆகியோரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்ப்பது.

6.கச்சநத்தம் கிராமத்தை திருப்பாசேத்தி காவல்நிலைய எல்லைக்குள் கொண்டுவருவது.

7.நிவாரண தொகையை உயர்த்திட பரிந்துரை செய்வது. 

ஆகிய முடிகள் எட்டப்பட்டது 

அதன்பிறகு ,சிகிச்சை பெற்று வருகிறவர்களை பார்த்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.சி/எஸ்.டி கமிஷன் துணை தலைவருடன் சந்திப்பு நடைபெறது. 


முடிவுகள் மக்களிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களின ஒப்புதலோடு இன்று(1.6.2018) உடல்களை பெற்றுக்கொள்வது
என முடிவு செய்யப்பட்டது.

எண்ணிப்பார்க்க முடியாத பாதிப்புகளை எதிர்கொண்ட கச்சநத்தம் மக்களின் உறுதி மகத்தானது.

போராட்ட களத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்த   திரு.கண்ணபிரான் பாண்டியன்,வழக்கறிஞர் பாஸ்கர் மற்றும் போராளிகள் முக்கியமானவர்கள்.

தோழர்.சுப அண்ணாமலை,    தோழர்.முருகன் கண்ணா, வழக்கறிஞர் சோலை,  முனுச்சாலை ராமர், புலிப்பாண்டியன், நாகை.திருவள்ளுவன், எவிடன்ஸ் கதிர் என பங்களிப்பு செய்தவர்கள்  (பெயர் தெரியாத காரணத்தால் சிலரது பெயர்கள் விடுபட்டிருக்கலாம்) பாராட்டுக்குறியவர்கள்.



புதிய தமிழகம் தலைவர்.திரு.க.கிருஷ்ணசாமி அவர்கள் களத்திற்கு வந்து,பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அரசோடு பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர் .தொல்.திருமாவளவன் ,நாம் தமிழர் கட்சி தலைவர். தோழர்.சீமான் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்கள். இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

சி.பி.எம் மாநிலக்குழு ரூ 50 லட்சம் நிவாணம் கோரி அறிக்கை வெளியிட்டது. சி.பி.எம் மாநில செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து தொடர்பில் வந்து நிலைமைகளை கேட்டறிந்தார். 

சி.பி.எம் தலைவர்கள் தோழர்.க.கணகராஜ், க.பாலபாரதி, ஆர்.விஜயராஜன், சி.ராமகிருஷ்ணன், என்.நன்மாறன் ஆகியோர் நேரில் வருகை தந்தனர்.


தீண்டாமை ஒழிப்பு முன்னணி மானாமதுரை உள்பட 18 இடங்களில் ஜூன் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. முன்னணியின் தலைவர்கள் தோழர்.ஆர்.கிருஷ்ணன், எம்.கந்தசாமி,   த.செல்லகண்ணு, எம்.பாலசுப்பிரமணியமன், மா.கணேசன்.மற்றும் சி.பி.எம், தீ.ஒ.மு தோழர்கள்   4 தினங்களும் போராட்ட களத்தில் இருந்தனர். 


தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை,ஆதவன் தீட்சண்யா மிகுந்த கவலையுடன் விசாரித்தனர். 


இயக்குனர் பாரதிராஜா, கௌதம் ஆகியோர் வருகை வரவேற்பிற்குரியது. 

இறுதி நிகழ்விற்கு உடல்கள் இப்போது எடுத்து செல்லப்படுகிறது. 

இதுவே இறுதி நிகழ்வாகட்டும்.

No comments:

Post a Comment