நேற்று சென்னை சென்று திரும்பி வருகையில் இரவு பத்தரை  மணி அளவில்  ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட்டில் பார்த்த காட்சி கீழே உள்ளது.
குடித்த பாட்டிலை வாகனத்திலிருந்து அப்படியே தூக்கி எறிந்தால்  அது உடைந்து கண்ணாடி துண்டுகள் யார் காலிலாவது குத்தி விடுமே என்ற அக்கறையில்
பாட்டிலை அப்படியே நடு ரோட்டில் நிறுத்தி வைத்துள்ள
அந்த குடி மகனின் பொறுப்புணர்வை பாராட்டுவோம்.
மிக முக்கியமான பின் குறிப்பு :
ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டில் அந்த காட்சியை பார்க்கையில் முதலில் காமெடியாகத்தான் தோன்றியது. அடுத்து ஒரு மணி நேரம் கழிந்து வாலாஜா டோல்கேட் வந்த போதுதான் கவலை வந்தது. 
அந்த நள்ளிரவில் அந்த டோல் கேட் கவுண்ட்டர்களில் பணியாற்றிக் கொண்டிருந்தது பெண் ஊழியர்கள்தான். குடி மகன்கள்  உலாவும் அந்த நடுநிசி நேரத்தில்  அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? 
இந்த பணியில் பெண்களுக்கு  இரவு ஷிப்ட் அவசியமா?

 
 
No comments:
Post a Comment