Wednesday, June 13, 2018

சாமியார்களும் சாமானியர்களே - தற்கொலை உட்பட . .



ம.பி முதல்வரால் அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்ட "பாயு மஹராஜ்" என்ற சாமியார் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். எந்த ஒரு மரணமும் துயரமானதே.

தன் தற்கொலைக்கான காரணமாக "தாங்க முடியாத மன அழுத்தம்"  என்று தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார். 

இன்று சாமியார்களை நாடிச் செல்கிற பலரும் அதற்கான காரணமாக முக்கியமாக சொல்லும் விஷயம்

"அந்த சாமியாரிடம் சென்றால் மன அழுத்தம் குறைகிறது. அவர் பேசுவதைக் கேட்டாலே போதும், மனம் தெளிவடைகிறது, etc, etc"

"ஆனால் சாமியார்கள் ஒன்றும் சர்வ சக்தி படைத்தவர்கள் அல்ல, அவர்களும் சாமானிய மனிதர்களே. மோடியைப் போல அவர்களும் நாவன்மை படைத்தவர்கள், அவ்வளவுதான்"

என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு சாமியார்களிடம் இல்லை.  நீங்கள் நிதானமாக சிந்தித்தாலே அதன் காரணம் தெரியும். 

அரசியல், பொருளாதார, சமூகம் என்று பின்னணியில் இருப்பவற்றை அறிந்து கொண்டால் தீர்வு காணும் வழியும் கிடைக்கும்.

சாமியார்களும் சாமானிய மனிதர்களே என்பதை பாய்யு மஹராஜ் கற்றுக் கொடுத்துள்ளார்.

3 comments:

  1. நம்பிக்கை ராஜ்June 13, 2018 at 10:39 AM

    இறைத்தூதர்களும் , இறை குமாரர்களும் , நாயன்மார்களும் , ஆழ்வார்களும் சாமானியர்களே

    ReplyDelete
    Replies
    1. பாயு மஹராஜ் யோக்கியத்தை பேசினால்... "நீ என்ன யோக்கியமா"என்று கேட்க டவுசர்களால் மட்டுமே முடியும்..

      Delete
    2. நம்பிக்கை ராஜ்June 13, 2018 at 2:30 PM

      இங்கே எந்த மத தலைவர்கள் பெயரும் இல்லையே ?
      நீங்க எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க ?
      குல்லாவை மறையுங்க

      Delete