Friday, June 29, 2018

அச்சா தின் தானே மோடி?????




ஒரே நாளில் இரண்டு செய்திகள் 

டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய்  அறுபத்தி ஒன்பது என உயர்ந்துள்ளது.

ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்படும் இந்திய கருப்புப் பணம் கடந்த ஆண்டில் வழக்கத்தை விட ஐம்பது சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அப்பப்பா என்ன வளர்ச்சி! என்ன வளர்ச்சி !!

டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை ஐம்பது ரூபாய் என்று கொண்டு வருவோம் என்று  தேர்தல் வாக்குறுதியும் கூட இவ்வளவு மோசமாக பல்லிளித்து விட்டது.

கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மோடி சொல்வதெல்லாம் சும்மா ஜூம்லா என்று சின்னக்குழுந்தைகளுக்குக் கூட தெரியும். கருப்புப் பணக்காரர்களின் அரசல்லா மோடி அரசு! அதுவாவது கருப்புப் பணத்தை ஒழிப்பதாவது!! அதனால்தான் ஸ்விட்சர்லாந்தில் குவிக்கப்படுகிற இந்தியக் கருப்புப் பணம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால் எப்படி கருப்புப் பணம் அதிகரிக்கும்? இது மோடி அரசின் சாதனை அல்லவா?? என்று கூட ஜெமோ, மாரிதாஸ் போன்ற  மோடி பக்தர்கள் வாதிட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையே கூட அப்படியே உல்டாவாக்கி ரூபாயின் மதிப்பு  அறுபத்தி ஒன்பது ரூபாயாகி உள்ளது என்று கூட இவர்கள் கூறலாம். அதைக் கூட  சில அப்பாவிகள் உண்மையென நம்பலாம்.

இன்னும் ஒரு வருடத்திற்குள் எத்தனை அச்சா தின் வரப் போகிறதோ ?




No comments:

Post a Comment