Tuesday, April 20, 2021

போர்ட் பவுன்டேசனால் ஒரு போதும் முடியாது

வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் முக்கியமான முக நூல் பதிவு. 

Corona இரண்டாவது அலை வருகிறது என்று ஆறுமாதமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். வந்தவுடன் ஆக்சிஜன் இல்லை. படுக்கை இல்லை. தடுப்பூசி இல்லை.

பிஜேபி அரசுகளை பற்றி சொல்ல எதுவும் இல்லை. சங்கிகள் டிசைன் அதுதான். அவர்களால் அவ்வளவுதான் முடியும் போலிருக்கிறது.
புரிந்து கொள்ள வேண்டியது ஆம் ஆத்மி டைப் கட்சிகளைத்தான். ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கம், சின்னச் சின்ன வேலைகளை ஓரளவு சரியாக செய்து விடுவது இவற்றின் மூலம் இது ஏதோ மாறுபட்ட கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயல்கிறது ஆம் ஆத்மி.
இப்போது டெல்லியில் ஒருவாரம் ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வழக்கம் போல ஒரு ஏற்பாடும் இல்லை. அவர்கள் சென்ற ஆண்டு போலவே சொந்த கிராமங்கள் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆம் ஆத்மியின் மனித நேயம் அவ்வளவுதான். அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு NGO வைத்து இருந்தவர். ஃபோர்டு பவுண்டேசன் நிதி வாங்கியவர். ஊழல் ஒழிப்பு தூய்மையான நிர்வாகம் போன்ற கவர்ச்சி கோஷங்கள் வெறும் வெற்று முழக்கங்கள் தான். மிடில் கிளாசை வசீகரிக்கும் NGO தந்திரம்.
உண்மையான பிரச்சினைகள் பற்றியும், கொடும் பசியுடன் ஊர் நோக்கி நடக்கும் மக்கள் பற்றி NGO பின்னணியில் இருந்து வந்த கட்சிகளுக்கு ஒரு அக்கறையும், புரிதலும் இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்திலும் கமல், சகாயம் போன்றோர் இது போன்ற கட்சிகளை உருவாக்க முயல்கின்றனர்.
நமக்குப் பக்கத்தில் ஒரு சிறிய மாநிலம் இருக்கிறது. புலம் பெயர் தொழிலாளிகளுக்கு இருப்பிடமும் உணவும் ஏற்பாடு செய்து ஊருடன் தொடர்பு கொள்ள செல்லுக்கு சார்ஜும் செய்து கொடுத்தது. போக விரும்பிய வர்களை ரயில் ஏற்றி விட்டு உணவும் நீரும் இலவசமாகக் கொடுத்து அனுப்பியது.
டெல்லியில் இல்லாத பணம் கேரளாவில் இருக்கிறதா என்ன? போர்டு பவுண்டேசனால் ஒரு ஷைலஜா டீச்சரை இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது.

பிகு: படம் உதவி : தோழர் களப்பிரன்

No comments:

Post a Comment