Wednesday, April 28, 2021

கொள்ளி வைத்த பெண் கொலை

 சமீபத்தில் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியன் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன். தந்தைக்கு கொள்ளி வைக்க    அனுமதிக்கப் படாமல் அவர் மகள் அவமானப்படுத்தப்பட்டது குறித்த பதிவு அது.

அப்போதுதான் ஆறு வருடங்களுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதம் எழுதிய பதிவு நினைவுக்கு வந்து அதனை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

 

Monday, April 6, 2015

தாய்க்கு கொள்ளி வைத்த மகள் கொலை

 

 


 

இந்த அராஜகம் நிகழ்ந்தது சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹ்டா என்ற கிராமத்தில்.

 சூர்ஜூபாய் என்ற 85 வயது மூதாட்டியை மகன் சந்தோஷ் இரண்டு வருடங்கள் முன்பே வீட்டை விட்டு விரட்டி விட்டான். அந்த மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்த மகள் கீதா ப்ரஹலாத்தே தான் இறந்த பின்பு தனக்கு இறுதிக்கடன் செய்ய வேண்டும் என்பது அந்த மூதாட்டியின் விருப்பம்.

 அது போலவே சூர்ஜுபாய் இறந்ததும் அவருக்கு கொள்ளி வைக்கிறார் கீதா ப்ரஹலாத். அதனால் கடுப்பாகிற சந்தோஷும் அவன் மகன் பியூஷும்  கீதாவை கொன்று விடுகிறார்கள்.

 என்ன ஒரு கொடுமையான செயல் இது?

 தன் பொறுப்பை நிறைவேற்ற முன்வராத சந்தோஷிற்கு கொள்ளி வைக்கும் உரிமை மட்டும் எங்கிருந்து வருகிறது?

 இன்று உலகமே அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது.

 இதிலே கீதா ப்ரஹலாத் அந்த கிராமத்து தலைவராக சமீபத்தில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெண்கள் ஓரடி முன்னே நகர்ந்தால் ஈரடி பின்னே இழுக்கத்தான் எத்தனை சதிகள் நடக்கிறது! அவற்றில் இதுவும் ஒன்று. 

 ஆண்டுகள் உருண்டோடினாலும் நிலைமையில் பெரிய மாறுதல் இல்லை. மத்யமர் குழுவின் பின்னூட்டங்கள் அதனை உணர்த்தின. சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பிற்போக்கு சிந்தனையை கெட்டிப் படுத்தவே சங்கிகள் முயல்கின்றனர்.

 அதே நேரம் சம்பிரதாயக் காவலர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதற்கு எனக்கு இரண்டு மயான அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment