Saturday, April 3, 2021

ஓவர் சைட்டாம், நம்புங்கய்யா, நம்புங்க . . .

 


சேமிப்புக்கான வட்டி விகிதங்களை குறைத்து விட்டு எதிர்வினைகளைப் பார்த்து அது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று அஞ்சி அதை திரும்பப் பெற்ற மத்தியரசும் நிர்மலா அம்மையாரும் சொன்ன காரணம்தான் அவர்களின் மோசடித்தனத்தை (மோடித்தனத்தை) அம்பலப்படுத்துகிறது. 

ஓவர் சைட்டால், அதாவது கவனக் குறைவால் தவறாக ஆணை வெளி வந்து விட்டதாம்.

ஒரு மருத்துவர் ஓவர் சைட்டால் தவறான மருந்தை கொடுத்தால்,

ஒரு வழக்கறிஞர் ஓவர் சைட்டால் தவறான செக்சனை சொன்னால்,

ஒரு ஊழியர் ஓவர் சைட்டால் தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தினால்

இவர்கள் எல்லாம் ஏராளமான விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும்.  தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்திய ஊழியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். கவனக் குறைவு என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

அப்படி இருக்க இந்த அம்மணி, ஜஸ்ட் லைக் தட் கவனக்குறைவு என்று சொல்கிறார். 

தேர்தலுக்காகத்தான் இந்த முடிவு என்று சொல்லும் நேர்மை கூட இந்த மோசடிக் கூட்டத்திற்கு கிடையாது.

ஆனால் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.

கவனக்குறைவால் வெளியான அரசாணை மீண்டும் கவனத்தோடு தேர்தலுக்குப் பிறகு வெளியாகும்.

இருபது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலையும் உயரும்.

அதனால் உங்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கே இருக்கட்டும். 

No comments:

Post a Comment