Saturday, April 3, 2021

தடுப்பூசி : மரண பயத்தை காண்பிச்சுட்டாங்க மோடி

 


தேர்தல் முடிந்ததும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

 இந்த காணொளியை பார்த்ததும் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறேன்.

 நீங்களும் பாருங்கள்.

 மதுரை தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுவதை கேளுங்கள்.

 தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரம் பகிர்ந்து கொண்ட யூட்யூப் இணைப்பை தரவிறக்கம் செய்து அந்த குறிப்பிட்ட தருணத்தை மட்டும் உங்களுக்காக அளித்துள்ளேன்.

 


இப்போது சொல்லுங்கள்.

 “ஒட்டு மொத்த அரசியல் விஞ்ஞானம்” என்ற படிப்பை படித்ததாக சொல்லப் படும் மோடி கண்டு பிடித்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள நீங்கள் தயாரா?

 மழை பெய்கையில் போர் விமானம் சென்றால் ரேடாரில் விமானம் தெரியாது என்ற போர்த்தந்திரத்தை விமானப்படைக்கு சொன்ன மோடியால் ஏன் தடுப்பூசியை கண்டு பிடித்திருக்க மாட்டாரா என்று சங்கிகள் கேட்பது என் காதில் விழத்தான் செய்கிறது.

 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் போட நினைத்தவர்களுக்கும் “மோடிதான் தடுப்பூசியை கண்டு பிடித்தார்” என்று சொல்லி மரண பயத்தை காண்பித்து விட்டார் ஆர்.பி.உதயகுமார் என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment