Wednesday, April 28, 2021

பொதுத்துறை பணமே! மோடியின் முகமே!

 



அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கொரோனா விழிப்புணர்வு பேனர்களை வைக்க வேண்டும் என்று மத்தியரசு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான மாதிரி பேனர்களையும் அவர்களே வடிவமைத்து அனுப்பி உள்ளனர்.

 அனைத்திலும் முகமுடி அணிந்த மோடியின் புகைப்படம் இருக்கிறது.

 “பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே உருவானது, யாருக்கோ செல்லப்பிள்ளை என்பதால் நாங்கள் வளர்க்க முடியுமா” என்று சொன்னவர் மோடி.

 பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு சுமை என்று சொன்னவர் நிர்மலா அம்மையார்.

 தடுப்பூசி தயாரிப்புக்கு பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற குரலை உதாசீனம் செய்பவர்கள் இவர்கள்.

 ஆனால் இவர்களுக்கு ஓசி விளம்பரம் செய்ய மட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டுமா?

 அம்பானி, அதானியிடம் போய் சொல்லுங்களேன். உதை விழும். அவர்களுக்கு தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர உங்களின் தேவைக்கு அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

 பிகு: இந்த பேனர்கள் குறித்து நாங்கள் பேசுகையில் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் குணாளன் ஒரு கேள்வி எழுப்பினார். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களில் மோடியின் புகைப்படம் அச்சடித்துத் தருகிறார்கள். கொரோனா காரணமாக இறந்து போகின்றவர்களுக்கு தரும் இறப்புச் சான்றிதழிலும் மோடியின் புகைப்படம் போட்டு அச்சடித்து தருவார்களா?

 மிகச் சரியான கேள்வி இது. மோடி வகையறாக்கள் ஆவன செய்வார்களா?

 பிகு 2 : பேனரில் இருந்த மோடி புகைப்படத்தை, நாமும் எதற்கு ஓசி விளம்பரம் தர வேண்டும் என்பதால் மறைத்து விட்டேன்.

No comments:

Post a Comment