Monday, April 26, 2021

ஸ்டெரிலைட் -சூழ்ச்சிக்கு இரையாகாதீர்

 


பெருந்தொற்று சூழலையும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டையும் பயன்படுத்திக் கொண்டு தன் விஷத் தொழிற்சாலையை மீண்டும் திறக்க தயாராகிறது வேதாந்தா நிறுவனம்.

வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக மத்தியரசு செயல்படுகிறது. அதன் கடைக்கண் பார்வை படியே செயல்படும் எடுபிடி அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது. எத்தனையோ தலை போகிற பிரச்சினைகள் போதெல்லாம் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை உதாசீனம் செய்த எடுபிடி இன்று அவசரம் காட்டுவது ஏன்?

ஏன் ஸ்டெரிலைட்டை திறக்கக் கூடாது?

ஆபத்தான நச்சுப் பொருட்கள் தயாரித்த தொழிற்சாலைதான் அது. ஆக்ஸிஜன் தயாரித்த தொழிற்சாலை அல்ல. அதன் உபகரணங்கள் உயிர் குடிக்க உதவுமே தவிர, உயிர் காக்க அல்ல.

விசாகப்பட்டிணத்தில் முதல் ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திக் கொள்ளவும். 

மூடிக்கிடந்த ஒரு ரசாயன ஆலையை பராமரிப்புக்காக என்று திறந்த போது பல நாட்கள் பயன்படாத ஒரு ரசாயன வாயு கசிந்து சுமார் பத்து பேர் இறந்தார்கள். பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு நிலை தூத்துக்குடிக்கு வர வேண்டுமா?

கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம் போல ஆக்ஸிஜன் தயாரிக்க என்று உள்ளே நுழையும் ஸ்டெரிலைட் இதர உற்பத்திகளை தொடங்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

விதிகளை எல்லாம் மிதிப்பதில் ஸ்டெரிலைட்டின் கடந்த காலம் ஊரறிந்த ரகசியம்.

தமிழக அரசே, எப்படிப்பட்ட அழுத்தம் எங்கிருந்து வந்தாலும் ஸ்டெரிலைட்டை திறக்காதே! மேலும் வாக்குப் பதிவு முடிந்து இன்னும் சில தினங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளதால் உனக்கு அதற்கான அதிகாரம் கிடையாது.

ஸ்டெரிலைட்டை மூடுவதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மக்களின் தியாகத்தை அர்த்தமிழக்கச் செய்யாதே!


No comments:

Post a Comment